Thursday, October 10, 2013

கல்லிடை பயணம்

அனைத்து வாசக/வாசகிகளுக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த நவராத்ரி நல்வாழ்த்துக்கள்!!

அத்வைதாவோட நாமகரணத்தை ஒரு காரணமா வச்சுண்டு மெட்ராஸ் வந்தாலும், பக்கத்துல யாரோ பேசர்துக்கு உம் கொட்டிண்டே எதிர்தாப்புல போகும் ஊதா கலரு ரிப்பன்னையும் அவளோட அப்பனையும் பாக்கர மாதிரி நம்ப வானர மனசு கல்லிடையை சுத்தி தான் நொண்டி அடிக்கர்து. ஊருக்கு போகர்துக்கு முன்னாடியே சாஸ்தா ப்ரீதியோட சேதி தேதியோட வந்துடுத்து. தோஹால இருந்தே தங்கமணிகிட்டயும் “அண்டா நிறைய பாயாசம் இருப்பதாலும் தெரு முழுக்க மாமா/மாமி வம்பு இருப்பதாலும் 2 நாள் கல்லிடை போய்வர அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”னு ஒரு பிட்டை போட்டு பர்மிஷன் வாங்கி வச்சுண்டாச்சு. அப்புறம் என்ன, நாமகரணம் முடிஞ்ச ரெண்டாவது நாள் வாலை கிளப்பிண்டு ஓடும் கன்னுகுட்டி மாதிரி ஒத்த பையை தூக்கிண்டு பெருங்குளத்தூர்ல போய் நின்னு எங்க ஊருக்கு போகும் ஆம்னி பஸ்ஸுக்கு போனை போட்டு “சம்முகம் அண்ணாச்சியா? அண்ணாச்சி எங்க இருக்கீய? நான் இங்க பெருங்குளத்தூர்ல நிக்கேன்! நீங்க பைய்ய்ய்ய வந்து ஏத்திகிடுங்க!னு பேசிண்டு இருக்கும் போது என்னோட மச்சினன் “அத்திம்பேர் பை மட்டும்தான் போகர்தா நீங்க போகலையா?”னு பாவமா கேட்டான்.

பஸ்ஸுக்குள்ள ஏறினா “ஏ மாப்ளே! நீ எங்கடா வந்தை?”னு ஒரு குரல் கேக்கர்து. “அண்ணா! எப்பிடி இருக்கேள்?”னு ஒரு குத்துக்கல்தெரு பொண்ணு ஜாரிக்கர்து. “ஆத்துக்காரி வரலையாடா கோந்தை?”னு இன்னொரு மாமி ஜாரிப்புக்கு நடுல புகுந்து என்னோட சீட்டுக்கு போனேன். ஒரு மினி கல்லிடையே பஸ்ஸுக்குள்ள பாத்தமாதிரி ஒரு சந்தோஷம்! அந்த சந்தோஷத்தோடையே கண்ணை மூடி திறந்தா தாழையுத்தூர் சிமெண்ட் பாக்ட்ரி வந்துடுத்து. திருனவேலிகாராளுக்கு அந்த இடத்துலேந்தே திருனவேலி ஆரம்பம் ஆயிடும். கல்லிடைகாராளுக்கு சேரன்மகாதேவி தாண்டியாச்சுன்னா கல்லிடை தான். பஸ் ஸ்டாண்ட்ல ஒரு மாமா டர்க்கி டவலை தலைப்பா கட்டிண்டு அவரோட பொண்ணு மாப்பிள்ளைக்கு காத்துண்டு இருந்தார். அடுத்த ரெண்டு நிமிஷத்து ‘சிங்கம்’ பட டைரக்டர் ஹரி படத்துல 15 டாடா சுமோ வரிசையா போகரமாதிரி 10 ஆட்டோ எல்லா தெருவுக்கும் சீறிபாய்ஞ்சுண்டு போச்சு.

‘திடுதிப்பு’னு ஊருக்கு கிளம்பினதால விஷேஷத்துக்கு வந்த அம்மா அப்பா கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல வந்துண்டு இருந்தா, கொலு மேளம் வாசிக்க போன கணேச கம்பர் மாதிரி முதல் ஆளா பூட்டியிருக்கும் ஆத்துவாசல்ல போய் இறங்கினா, ‘ஏஏஏ மாப்ளே! பொண்ணரசி என்ன சொல்றா?’னு ஒரு அண்ணா கேக்க, அவாத்து மாமி ‘பல்தேய்ச்சுட்டு காபி குடிக்க வா!’னு கூப்பிட்டா. இந்த அன்பும் பாசமும் தான் ஊர் ஊர்னு கோட்டி புடிச்சு நம்மை அலைய வைக்கர்து. இந்த தடவை எங்க தெருதான் சாஸ்தா ப்ரீதியோட ஏற்பாடுங்கர்தாலையோ என்னவோ தெரியலை தெருவே ஜே ஜேனு இருந்தது. இருக்கர கூட்டம் போராதுன்னு பாம்பே,மெட்ராஸ்,பாலக்காடு,கல்கத்தா,மஸ்கட்னு எல்லா இடத்துலேந்தும் செட்டு செட்டா ஆட்கள் வந்து குமிஞ்சுருந்தா. வெளியூர்லேந்து வந்தவா எல்லாருக்கும் தெருல ஒரு மண்டபத்துல காபி ஆகாரம் ஏற்பாடு ஆயிருந்தது. 'மாமா கொஞ்சம் சட்னி விடுங்கோ!'னு யாரோ ஒரு கல்கத்தா மாமி கூப்பிட்டுண்டு இருந்தா. சட்னி/சாம்பார் இல்லாமையே ஒரே சிட்டிங்ல 12 இட்லி சாப்பிடர மாதிரி இருந்த அவாத்து மாமா பக்கத்துல உக்காசுண்டு காபிக்கு காத்துண்டு இருந்தார்.


மஹா நைவேத்யம்!

மெதுமெதுவா தெருலேந்து ஆட்டோ கிளம்ப ஆரம்பிச்சது. நானும் ஒரு பாலக்காடு மாமாவை ‘ஆஹாரம் கழிச்சேளா மாமா?’னு கேட்டுண்டே அவரோட பக்கத்துல ஏறி உக்காசுண்டுட்டேன். ‘நீ ஆருனு மனசுல ஆகலை கேட்டையா?’னு அவர் சொன்னதுக்கு அப்புறம் ‘ஹலோ ஐ யம் சஞ்ஜய் ராமசாமி!’னு அறிமுகம் பண்ணிண்டே கோவில்வாசல்ல போய் இறங்கியாச்சு. எத்தனை வருஷம் ஆனாலும் எவ்ளோ சம்பாத்யம் பண்ணினாலும் இன்னும் தைரியமா கோவில் வாசல்ல செருப்பை கழட்டர்துக்கு பயமாதான் இருக்கு. திருப்பி மத்யானம் பொட்டப்பொடைக்கர வெய்யில்ல ஆத்துக்கு கிளம்பர்துக்கு வெளில வந்து பாத்தா யாராவது நம்ப செருப்பை “எக்ஸ்சேஞ் மேளா”ல லவட்டிண்டு போயிருப்பா. அதனால முதலியப்பபுரம் தெருல முன்னடிக்க இருக்கும் ஒரு மாமியாத்துல போய் ‘செளக்கியமா இருக்கேளா?’னு ஜாரிச்சுட்டு அப்பிடியே செருப்பை பத்திரபடுத்திட்டு வந்தேன்.

இத்தூணூன்டுலேந்து சதாபிஷேக தம்பதிகள் வரைக்கும் எல்லாரையும் சாஸ்தாங்கோவில்ல பாக்கமுடிஞ்சது. எல்லார் முகத்துலையும் அப்பிடி ஒரு சந்தோஷம். எந்தபக்கம் திரும்பினாலும் “செளக்கியமா இருக்கேளா? பொண்ணு எங்க இருக்கா?’ ‘பிள்ளைக்கு பாத்துண்டு இருக்கேளா? அமெரிக்கால தெற்க இருக்கானா வடக்க இருக்கானா?’ ‘பேத்திக்கு ஆயுஷ்ய ஹோமம் நன்னா கழிஞ்சுதா?’ ‘கல்யாணியோட மூத்த ஓர்படி பம்பேல திடீர்னு போய்ட்டாளாமே? ஓஓஓ! ஏதுடி இப்பிடி சொல்றை?’ ‘ஏ ராஜூ! அப்பாக்கு ஹார்ட் ஆப்ரேஷன் ஆச்சாமே?’ ‘ரெண்டாம் மூத்தவனுக்கு மட்டுக் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா பொறுப்பு கழியும். ஹம்ம்ம்ம் ஆதிமூலம் தான் வழிவிடனும்!’னு பலவிதமான சம்பாஷணைகள் காதுல கேட்கும் போது டைம் மிஷின்ல ஏறி ஆறு வருஷம் பின்னாடி போன மாதிரி இருந்தது.

பிலிம் ரோல் போட்ட 'கோடாக்' காமிரால முன் பக்கமூடியை திறக்காம போட்டோ எடுத்த காலம் போய் ஏகப்பட்ட எஸ் எல் ஆர்-களும் 'ஆப்பிள்' ஐ பேடும், சாம்சங் காலக்ஸியும் பாக்கமுடிஞ்சது. யாரோ ஒரு மாமி ஐ பேட்ல தீபாராதனையை ரெக்கார்ட் பண்ணிண்டு இருந்தா. இன்னொரு மாமா ரொம்ப சீரியசா “பதினஞ்சு நாளுக்குள்ள ஒரு முடிவு தெரிஞ்சாகணும்”னு செல்போன்ல யார்டையோ சொல்லிண்டு இருந்தார். ‘பதினஞ்சு நாள்ல முடிவு தெரியனும்னா அப்போ நம்ப ‘ஏர்போர்ட்’ நாராயணசாமி கிட்ட தான் கேட்கனும்’னு மனசுக்குள்ள நினைச்சுண்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் பெங்களூர் கோமா மாமி & அவாளோட பொண்ணு மாப்பிள்ளை பேரன்கள் எல்லாரையும் பாத்து பேசினேன். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் சாஸ்தா ப்ரீதில கலந்துண்டது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. (சாஸ்தா ப்ரீதி விஸ்தாரமா படிக்க Part 1 Part 2)

குறிப்பு - நமோ / மிஷன் 272 ப்ளஸ்/ ராகுல்/ நான்சென்ஸ்/ ஒபாமா/ அமெரிக்கா/ சிரியா/ நஸ்சிரியா / கருப்பசாமி பாண்டியன்/ லாலு/ பெங்களூர் கோர்ட்/ ஓனாயும் ஆட்டுக்குட்டியும்/ காமென்வெல்த்/ தமிழருவினு பல விஷயங்களை பதிவா எழுதும் ஜாம்பவான்களுக்கு நடுல கல்லிடையின் எல்லையை தாண்டாத இந்த தக்குடு ப்ளாக்ல இதுவரை ஒரு லட்சம் ஹிட்ஸ் கொடுத்து ஆதரவு அளித்த(க்கும்) அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்!

Thursday, September 19, 2013

மறுபடியும் ஒரு பயணம் (Part 2)

Part I படிக்க இங்கே 'க்ளிக்'கவும்

போன் பண்ணினாளே தவிர எனக்கு இவா ரெண்டு பேரும் எப்பிடி வரப்போரானு சந்தேகமாவே இருந்தது. மைனர்வாளை பத்தி உங்க எல்லாருக்குமே நன்னா தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இன்ட்ரோ பாட்டு போட்டு அறிமுகம் பண்ணிவைக்கர காலகட்டத்துல நாம இருக்கர்தால ஆர் வி எஸ் அண்ணாவை பத்தியும் கொஞ்சம் சொல்லதான் வேண்டியிருக்கு. ஒரு காலத்துல மூனு பக்கத்துக்கு குறைவு இல்லாம தமிழ் பிரவாகமா ஓடும் அகண்ட காவேரி மாதிரி ப்ளாக்ல எழுதிண்டு இருந்தார். கொஞ்சும் சலங்கை படத்துல வரும் ‘சிங்கார வேலனே வேலா’ பாட்டுல வரும் ஜெமினி & சாவித்ரி மாதிரி இவரோட பதிவும் அதுக்கு ரசிகமணியோட கமண்டும் இருக்கும், நடுல T S பாலயா முகசேஷ்ட்டை மாதிரி நாங்களும் கமண்ட் போட்டு ரசிச்சுண்டு இருந்தோம். இவரோட பதிவுகளை எனக்கு தெரிஞ்ச சில நலம்விரும்பிகளுக்கு அனுப்பி வைக்கர்து உண்டு. அந்தமாதிரி ஒரு தடவை இவர் எழுதின போஸ்டை படிச்ச ஒரு மாமா, “தக்குடு! ஆர் வி எஸ்ஸுக்கு ஆனாலும் அசாத்திய தைரியம்டா! கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் சேப்பாயி சிணுங்கினாள்/உரசினாள்னு யாரோ ஒரு ஜலஜா கூட ஜல்ஸா பண்ணினதையெல்லாம் லஜ்ஜையே இல்லாம எழுதியிருக்காரே இந்த மன்னார்குடிக்காரர்! அவாத்து மாமி ஒன்னும் சொல்லமாட்டாளா?”னு வாயை பொளந்தார். “நாசமா போச்சு! ஜலஜாவும் இல்லை வலஜாவும் இல்லை! சேப்பாயி அவரோட கார் மாமா!”னு சொல்லி புரியவச்சேன். சமீபகாலமா மூஞ்சிபுஸ்தகத்துல ஒரு போஸ்பாண்டி மாதிரி பல வாலிபர்களை தன்னோட சுவாரசியமான எழுத்தால் வருத்தபடாம பாத்துக்கரார்.

அடுத்தது நம்ப கோவைசரளா மன்னிக்கவும் அனன்யாக்கா. ஓட்ட டப்பால கோலிக்குண்டை உருட்டிவிட்ட மாதிரி அப்பிடி ஒரு அமைதியான சுபாவம். எல்லாத்தையும் சிரிச்சமுகத்தோட எதிர்கொள்ளும் ஒரு மனப்பக்குவம். ஆத்துக்காரரை எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்லும் ஒரு பதிபக்தினு சொல்லிண்டே போகலாம். “மாங்காடு காமாக்ஷி கோவிலுக்கு ஆத்துக்காரரோட போயிட்டு நேரா உங்காத்துக்கு வந்துடறேன் கேட்டையா?”னு போன்ல தகவல் சொன்னா. “கோவிலுக்கு போன இடத்துல புதுசா கல்யாணமானவா மாதிரி வாக்குவாதம் பண்ணிண்டு இருக்காமா ரெண்டுபேரும் சமத்தா வந்துசேருங்கோ!”னு சொல்லிண்டு இருக்கும் போதே மைனர்வாள் “மடிப்பாக்கத்துலேந்து கிளம்பியாச்சு! வந்துண்டே இருக்கேன்!”னு போன்ல பரபரத்தார். இவர் நேரா கிளம்பி ரோட்டை பாத்து வண்டியை ஓட்டிண்டு வந்தா பரவாயில்லை, “புஷ்டியாக இருந்த ஒரு இளம் யுவதி இஷ்டியாக ஒரு யுவனின் முதுகில் பல்லிபோல் ஒட்டிக்கொண்டு வந்தாள்! கீரை வாங்கிக்கொண்டு வந்த வெத்தலை வாய் பாட்டி காரை பாக்காமல் குறுக்கே புகுந்தாள்!”னு வரவழில பாத்ததை எல்லாம் மனசுக்குள்ள அடைகாத்து மூஞ்சிபுஸ்தகத்துல போடர்துக்கு யத்தனம் பண்ணுவாரே அதுதான் கவலை!


மஹானுபாவர்களுடன் அடியேன் :)

ஒரு வழியா மைனர்வாள் தம்பதி சமேதராய் வந்து காட்சி குடுத்தார். காங்கிரஸ் காரியகமிட்டி மீட்டிங் அடண்ட் பண்ணர்துக்கு மார்டன் ஜீன்ஸ்ல வந்தமாதிரி தேசியக்கொடியை நெஞ்சில் குத்திண்டு வந்திருந்தார். இவர் வந்து அடுத்த ஐந்தாவது நிமிஷம் நம்ப லட்சிய தம்பதிகள் வந்து சேர்ந்தா. இவாள்ளாம் பெரிய ரைட்டர்ஸ் மாமா! கன்னாபின்னானு எழுதி தள்ளுவா!னு சொல்லி என்னோட மாமனார் & மாமியார் கிட்ட அறிமுகம் பண்ணி வச்சேன். ‘எதை பத்தி எல்லாம் எழுதுவா?’னு மெதுவா என்கிட்ட கேட்டார். ‘என்ன இப்படி கேட்டுட்டேள்! இவா எழுதாத ஏரியாவே கிடையாது சுருக்கமா சொல்லனும்னா இவா எழுதலைனா அது ஏரியாவே கிடையாது!’னு சொல்லிட்டு அரை லோட்டா ஜலத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘இவா எல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும்’னு எங்க மாமனார் அடுத்த கேள்வியை கேக்கவும் எனக்கு புரை ஏறிடுத்து. நானும் எழுதுவேன்னு சொல்லபோக, அவர் ஆசையா என்னோட ப்ளாக்கை திறந்து பாத்தா எல்லாம் பக்கத்தாத்து வம்பு எதிர்தாத்து வம்பாதான் இருக்கும் போதா குறைக்கு சிலுக்கு வேற நடுல வந்து ஒரு டான்ஸ் ஆடிட்டு போயிருப்பா.

‘இவாளோட எழுத்துக்கு நான் பரமவிசிறி. அதனால தான் பாக்க வந்துருக்கா!’னு சொல்லி சமாளிக்கர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. மைனர்வாளோட தர்மபத்தினி பக்கத்துல இருந்ததாலயோ என்னவோ தெரியலை மைனர்வாள்கிட்ட அப்பிடி ஒரு பவ்யம்! பேசர்தும் அவ்ளோ ஜாக்ரதையா பேசினார். அனன்யாக்காவாத்து மாமாவை இப்பதான் முதல் தடவையா பாக்கறேன். அசாத்தியமான பொறுமை. ரொம்ப நேரத்துக்கு கலகலனு எல்லாரும் பேசிண்டு இருந்தா. சாதாரணமான ஆரம்பிச்ச வம்பு ஒரு கட்டத்துல சோழமண்டல/பாண்டிய மண்டல பாடல்பெற்ற சிவஸ்தலங்கள் வழியா பயணம் பண்ணி பாலக்காடு கோயம்புத்தூர் எல்லாம் போய் கல்லிடை வந்து சென்னைக்கு திரும்பினது. சம்பந்தமே இல்லாம எவ்ளோ நேரமா பேசிண்டு இருக்கானு எங்க தங்கமணி ஆத்துல எல்லாரும் ஆச்சரியமா பாத்தா. பொதுவா இந்த மாதிரி நாட்டுக்கு அவசியமான டிஸ்கஷன் எல்லாம் TRC மாமாவாத்து அடுக்களைல டிக்காஷன் இறங்கிடுத்தானு பாத்துட்டுதான் ஆரம்பிப்போம். ஆனா பாருங்கோ! முன்னாடி எல்லாம் ஸ்டேட் ஸ்டேட்டா சுத்திண்டு இருந்த மனுஷர் இப்பெல்லாம் சிங்கபூர் மலேசியானு சுத்திண்டு இருக்கார்.

ரொம்ப நெருங்கின சொந்தக்காரா கிட்டகூட இந்த அளவுக்கு நாம பேசுவோமா அப்பிடிங்கர்து சந்தேகம்தான்! தொட்டுக்கோ தொடச்சுக்கோ!னு இருக்கும் சொந்தங்களுக்கு நடுல இது ஒரு வித்தியாசமான உலகம் தான்! எப்பிடியாவது அடுத்த தடவை அடப்பாவி தங்கமணியோட அப்பாவி ரெங்கமணியையும் சந்திக்கனும்.

கல்லிடை சாஸ்தா ப்ரீதி அடுத்த போஸ்ட்ல தான் பாக்கனும்!

Thursday, September 12, 2013

மறுபடியும் ஒரு பயணம்

ஹ்ம்ம்ம்ம்ம்ம்! சீன பயணி யுவான்சுவாங் மாதிரி ஊருக்கு போனா தான் என்னைமாதிரி ஏழைபாழைங்க போஸ்ட் எழுதமுடியர்து. முதல்ல ஒரு சந்தோஷமான சமாசாரத்தை சொல்லிக்கறேன் ஜூலை மாசம் பத்தாம் தேதி அடியேனுக்கு ஒரு பெண் குழந்தை ஆசிர்வாதமாகியிருக்கு. அவளை பாத்துட்டுவரலாம்னுதான் இந்த பயணம். குழந்தை பிறந்த செய்தி கேட்டதுலேந்து ‘எப்படாப்பா அதோட முகத்தை பாக்கபோறோம்’னு பட்டுண்டு வந்தது. “வெளி நாட்டுல வேலை பாத்தா இதுதான் ஒரு அசெளகரியம்! இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது”னு சராசரி வெளி நாடுவாழ் NRI இந்தியன் மாதிரி போலி ஒப்பாரி வைக்கர்துக்கு நான் தயாரா இல்லை. இதெல்லாம் உண்டுனு தெரிஞ்சுதானே கடலை தாண்டிவந்துருக்கு! அப்புறம் என்ன கண்ணை கசக்கிண்டு சின்னப்புள்ளத்தனமா? பிளைட்ல மட்டும் எப்ப ஏறினாலும் ஒரு பிரச்சனை நமக்கு முன்னாடி ஏறி உக்காசுண்டு நமக்காக காத்துண்டு இருக்கு. இந்த தடவை முதல்ல ‘ஆய்புவன்’ல புக் பண்ணி அப்புறம் கடைசி சமயத்துல கத்தார் ஏர்வேஸுக்கு மாத்தினதால கடைசி சீட்தான் கிடைச்சது. போய் உக்காசுண்டா பக்கத்துல கறுப்பு கலர் ட்ரெஸ் போட்ட ரெண்டு பொம்ணாட்டிகள்.

அம்மாவும் பொண்ணும் மாதிரி இருந்தா. ‘யாரேன் இருந்துட்டுபோறா நமக்கு என்ன வந்தது?’னு நான் இருக்கும் போதுதான் அந்தம்மா தோள்ல மாட்டியிருந்த கோணிப்பைலேந்து(ஹேண்ட் பேக்னும் சொல்லலாம்) கத்தார் பாஸ்போர்ட்டை வெளில எடுத்தது. “ஆத்த்த்தாடி! இந்தம்மாவும் பொண்ணும் லோக்கல் ஆளுங்களா? நான் தொலைஞ்சேன்டா இன்னிக்கி!”னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். நாம தெரியாம தூங்கி விழுந்தாலோ இல்லைனா அந்தம்மா தூங்கி விழுந்தாலோ நம்ம முதுகுலதான் தர்ம அடி விழும். ஏர்ஹோஸ்டஸ் கிட்ட “காபி/டீ போடர இடத்துல ஒரு முக்காலி இருந்தாலும் பரவாயில்லை கமாண்டோ சேர் போட்டா கூட போதும் உனக்கு பேச்சாட்டு துணைக்கு அங்க வந்து உக்காசுக்கறேன் இந்த இடத்தை மாத்திகுடும்மா!”னு கெஞ்சிண்டு இருக்கும் போது எனக்கு இடதுபக்கமா ஜென்னலோர ரெண்டு சீட்டுக்கு ஒரு தம்பதிகள் வந்து உக்காசுண்டா.

ரவுண்ட் நெக் டீசர்ட் போட்ட அந்த மாமா கிட்ட மெதுவா ‘மேடம் என்னோட இடத்துல உக்காசுண்டாங்கன்னா நான் உங்க பக்கத்துல வந்துடுவேன்னு பக்கத்துல இருக்கும் பொம்ணாட்டியை கண்காட்டிண்டே நான் முடிக்கர்துக்குள்ள “நோ நோ நாங்க சேர்ந்து வந்துருக்கோம்!”னு பதில் சொல்லிட்டு ஜன்னல் வழியா வெளில எட்டிபாத்துண்டா. ‘தாராளமா சேர்ந்து வாங்கோளேன்! யாருவேண்டாம்னா? இப்ப என்ன டைவர்ஸ்ஸா வாங்க சொன்னேன்? நாலு மணி நேரம் 2 அடி தூரத்துல உக்காசுண்டு பிரயாணம் பண்ணகூடாதா? மாமியோட அக்கா பையனுக்கு மெட்ராஸ்ல கல்யாணம்/ ஒன்னுவிட்ட மாமாவோட ஷட்யப்தபூர்த்தினு மாமாவை ஒரு மாசம் விட்டுட்டு ஜாலியா ஊருக்கு போகும் போது ஒன்னும் தெரியாது. இங்க மாமா பருப்புபொடில ஆரம்பிச்சு மூக்குபொடி சாதம் வரைக்கும் எதையாவது சாப்பிட்டு உயிரை கைல பிடிச்சுண்டு இருப்பார். நாம ஒரு ஆத்திர அவசரத்துக்கு பிளைட்ல கேட்கும்போதுதான் என்னவோ மூனாறுக்கு ஹனிமூன் வந்தவா மாதிரி கையை பிடிச்சுண்டு பேசிண்டு வருவா.

பக்கத்து வரிசைகாரர்கிட்ட கெஞ்சர்தை விட லோக்கல் பொம்ணாட்டிகள் கிட்ட ‘டப்பா’ இங்க்லீஷ்ல “யூ லைக் மை மதர் ஆண்ட் யுவர் டாட்டர் லைக் மை சிஸ்டர்! சிஸ்டர் சன்னுக்கு மை மடில தான் காது குத்திங்க்! ஆல் ஆர் சேம் சேம் பாமிலி”னு சொல்லும்போதே அந்த புண்ணியவதி என்னோட குழந்தை மனசை புரிஞ்சுண்டு ‘நோ பிராபளம் யூ சிட் ஐ சிட்!’னு சொல்லி அனுமதி குடுத்தாங்க.( பொதுவா இங்க இருக்கர மனுஷா கிட்ட Past particible/ verb/ future continuous tense இதெல்லாம் போட்டு பேசினா கடைசில “யாரு பெத்த புள்ளையோ! அய்யோ பாவம்!”னு சொல்லற மாதிரி ஒரு பரிதாப பார்வை பாத்துட்டு ‘மாஃபி இங்கிலீஷ்!’னு சொல்லிடுவா). அதுக்கு அப்புறம் பைசா நகர் சாய்ஞ்ச கோபுரம் மாதிரி இடதுபக்கமா சாய்ஞ்சுண்டே 4 மணிக்கூர் பிரயாணம் பண்ணினேன். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பக்கத்து வரிசை மாமா மெதுவா ‘தோஹால எத்தனை வருஷமா இருக்கேள்?’னு ஆரம்பிச்சார். “சீட் மாத்தி குடுக்க வக்கில்லை, முகரகட்டைக்கு பேச்சு என்ன வேண்டியிருக்கு பேச்சு?”னு ‘நறுக்’னு கேக்கும் எங்க ஊர் மாமிகளை மனசுல நினைச்சுண்டே “கொஞ்சம் வருஷம் ஆச்சு!”னு சுரத்தே இல்லாம பதில் சொன்னேன். நீங்க எங்க வேலைபாக்கறேள்?னு நான் கேட்காமையே அவர் ஒரு தனியார் இன்ஷுரன்ஸ் கம்பெனி பெயரை சொன்னார். “என்னடா எலி அம்மணமா போகுதே”னு எனக்கு முதல்லையே கொஞ்சம் சம்சியம் உண்டு, அந்த மனுஷன் கிட்ட அதுக்கு அப்புறம் ஒரு வார்த்தை பேசலையே.



லொட லொடனு பேசர்து இருக்கட்டும் முதல்ல குழந்தையை பாத்தியா? குழந்தை செளக்கியமா?னு பாசத்தோட கேட்கும் உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி! அம்மாவும் பொண்ணும் ஆண்டவன் அருளால் செளக்கியம்! குழந்தையோட முகஜாடை தக்குடுவை கலர் ஜராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு. என்னை மாதிரி வாயாடியா வந்துடுமோ!னு தங்கமணிக்கு இப்பவே கவலையா இருக்கு. கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தாமிரபரணி ஜலத்தை ஒரு வாய் குடிச்சா என் பொண்ணரசியும் வாயாடியாதான் வருவா. இதுல கவலைபடர்துக்கு என்ன இருக்கு?னு சமாதானம் சொன்னேன். குழந்தைக்கு நாமகரணம் முடிஞ்சதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு பதிவுலக ‘கோவைசரளா’ அனன்யாக்காவும் மன்னார்குடி ‘மைனர்வாள்’ ஆர் வி எஸ் அண்ணாவும் பாக்கர்துக்கு வரர்தா போன் பண்ணி சொன்னா.
போன் பண்ணினாளே தவிர.................. (தொடரும்)

அடுத்த வாரம் - பாலக்காடு, மன்னார்குடி சந்திப்பு & கல்லிடை சாஸ்தா ப்ரீதி வர்ணனை (விஜய் டிவி ‘ஆபிஸ்’ சீரியல் மாதிரி ‘நாளை’னு இரண்டு சீன் ஓட்டினாதான் நாலு மனுஷா எட்டிப்பாப்பா)

Saturday, July 6, 2013

ரெஸ்ட் ரூம்


88-வது வருஷத்துக்கு அப்புறம் தான் கல்லிடை காஸ்மோபொலிடன்ல கக்கா போகர்துக்கு தனியா ரூம் கட்ட ஆரம்பிச்சா. கட்டினதுக்கு அப்புறமும் பல பேர் ஓப்பன் யுனிவர்சிட்டில போய் தான் போயிட்டு வருவா. எதோ ஒரு படத்துல நம்ப கவுண்டமணி சொல்லுவாரே அதை மாதிரி ‘ஆனது ஆச்சு இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்’னு எங்களோட வானரபடையும் வயல்வெலில உரம் போட்ட காலங்கள் அதிகம். எங்க தெருல இருந்த மூச்சா மாமா ஆத்துல அவருக்கும் மாமிக்கும் எப்போதும் சண்டை வரும். என்ன?னு போய் பாத்தா “ஒன்னுக்கு போனதுக்கு போய் முக்கா வாளி ஜலம் விட்டுண்டு இருக்கா ஓய்! இப்பிடியே விட்டுண்டு இருந்தா ஒரு மாசத்துல தொட்டி ரொம்பிடும்!”னு ஆவலாதி சொல்லுவார். மாமி விட்ட முக்கா வாளி ஜலத்துக்கு சேர்த்து வச்சு மாமா முடுக்குல போய் தான் மூச்சா போவார், கடைசில அதுவே அவருக்கு முடுக்கு மூச்சா மாமானு பட்டம் வாங்கி குடுத்துடுத்து.

எங்க குரூப்ல சனி ஞாயிறு ஆச்சுனா சில வானரங்களுக்கு ‘டாடி எனக்கு ஒரு டவுட்டு’ ப்ரோகிராம் மாதிரி விபரித சந்தேகங்கள் வர ஆரம்பிக்கும். எதாவது ஒரு மாமா எங்க எல்லாரையும் விளையாடவிடாம பிடிச்சுவச்சு அட்வைஸ் பண்ணி கழுத்தை அறுத்துண்டு இருக்கும் போது 'பழிக்கு பழி புளிக்கு புளி’னு புத்திசாலி வானரத்தை உசுப்பிவிட்டாக்க அது போய் தன்னோட சந்தேகத்தை கேக்கும். ஒரு தடவை “முடுக்கு முடுக்கு!னு எல்லாரும் சொல்றாளே அதுக்கு ஏன் மாமா முடுக்குனு பேர் வந்தது?” அப்பிடினு கேக்கவும் அந்த மாமா அவாத்து மாமி கூப்பிடாமையே ‘இதோ வந்துட்டேன் என்னைதான் தேடரையா?’னு கேட்டுண்டே அவாத்துக்குள்ள போயிட்டார். பல வருஷங்களுக்கு அப்புறம், முடுக்கிண்டு ஓடர்தால அந்த இடத்துக்கு முடுக்குனு பேர் வந்துருக்கும் அப்பிடினு நாங்களே தீர்மானம் பண்ணிண்டோம்.

2006-ல பெண்களூர்ல ஒரு கம்பேனில வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் இன்னொரு விஷயம் தெரிஞ்சது. கக்கா ரூமுக்கு இந்த ஊர்ல ‘ரெஸ்ட் ரூம்’னு பேர். முதல்ல புரியவே இல்லை. அங்க போய் யாராவது ரெஸ்ட் எடுப்பாளா? அமெரிக்காகாரன் அறிவில்லாம பேர் வச்சான்னா நாமளும் அதையேவா சொல்லனும்னு நினைச்சுப்பேன். எங்க டீம்ல இருந்த ஒரு பிரகஸ்பதிக்கு புதுசா எதாவது டாஸ்க் குடுத்தா உடனே ரெஸ்ட் ரூமுக்கு ஓடிருவான். ஒரு தடவை டீம் லீடர் மீட்டிங்க் போட்டு இவனை தவிர எல்லாரும் ஆஜர் ஆயாச்சு. கடைசில எட்டு போன் போட்டதுக்கு அப்புறம் ஆடி அசைஞ்சு வந்தான். ‘என்ன சார்! ரெஸ்ட் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு வரீங்களா?’னு ஒரு சீனியர் கேட்டு மானம் கப்பல் எறினது.

தோஹால வந்து ஒட்டகம் மேய்க்க ஆரம்பிச்ச புதுசுல ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல்ல வச்சு ஒரு மீட்டிங். உள்ள நுழைஞ்சா ஒரு வெள்ளக்காரர் பூந்தொட்டில பூ அடுக்கிண்டு இருந்தார். ‘அடேங்கப்பா! பூ அடுக்கர்துக்கே வெள்ளக்காரன வேலைக்கு வச்சுருக்காங்கனா அப்ப இது பெரிய்ய ஹோட்டல்தான் போலருக்கு’னு நினைச்சுண்டேன். ஹோட்டல்ல இருந்த கதவு எல்லாம் கிண்டான் கிண்டானா இருந்தது. நாலு பேர் சேர்ந்து தள்ளினாதான் கதவை சாத்த முடியும். கடைசில ஒரு கான்பரன்ஸ் ரூம்ல எல்லாரையும் உள்ள தள்ளி கதவை சாத்திட்டா. நாங்க இருந்த ரூம்ல மொத்தம் 15 பேர் தான் இருந்தோம். காபி/டிபன் உபசாரங்கள் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வயத்தை கலக்க ஆரம்பிச்சது. பெரிய்ய ஸ்டார் ஹோட்டல்களோட ஸ்பெஷாலிடியே அங்க தரும் டீ/காபி தான். குடிச்சு முடிச்சு பத்து நிமிஷத்துல பர்கோலக்ஸ் மாத்திரை சாப்பிட்ட மாதிரி கலக்க ஆரம்பிக்கும். கல்யாணத்துக்கு மறுநாள் கட்டுச்சாதகூடை அன்னிக்கு காத்தால மாப்பிள்ளையாத்துக்காராளுக்கு குடுக்குர காபி/டீ மாதிரி இருக்கும்.

வராத போனை எடுத்து காதுல வச்சுண்டு ‘ஹலோ ஜார்ஜ் புஷ்ஷா? உங்களை பத்தி தான் பேசிண்டு இருந்தோம்!’னு சொல்லிண்டே மெதுவா வெளில வந்துட்டேன். அவசரம் அவசரமா ஓடிப்போய் ஒரு பிலிபைன்ஸ் பொம்ணாட்டி கிட்ட, ‘வெரி அர்ஜண்ட்! வெரி அர்ஜண்ட்!’னு சொல்லவும் அவள் வேகமா ஒரு மூனு இலக்க போன் நம்பரை தந்தா. ‘ஸ்டார் ஹோட்டல்ல கக்கூஸ் போகர்துக்கு கூட கால் பண்ணி கன்பார்ம் பண்ணிக்கனும் போலருக்கு’னு நினைச்சு நம்பரை வாங்கினா அது ஆம்புலன்ஸ் நம்பராம். ‘அடிப் பாதகத்தி!’னு மனசுக்குள்ள புலம்பிண்டே 'அம்மாடி புண்ணியவதி! நன்னா இருப்பை! ரெச்ட் ரூம் எங்க இருக்கு?னு சொல்லு தாயி!’னு கெஞ்சவும் அவள் நிதானமா ‘ஓஓ! ரெஸ்ட் ரூமா?’னு ராகம் போட்டா. ‘நேரா போய் ரைட்ல திரும்புங்கோ!’னு கையால வழி காட்டினா. ஓட்டமும் நடையுமா அவள் காமிச்ச வழில ஓடிப்போய் பாத்தா அங்க ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. மறுபடியும் யூ டேர்ன் போட்டு இன்னொரு ஆள் கிட்ட கேட்டா அவரும் இதே திக்கை பாத்து கையை காமிச்சார். ‘அடப்பாவிகளா! உங்களோட மங்கி கேமுக்கு நான் தான் கிடைச்சேனா?’னு மனசுக்குள்ள நொந்துண்டு மறுபடியும் அங்க போனா அங்க ஒரு கான்பரன்ஸ் ஹாலோட வாசல் தான் இருந்தது.


எவ்ளோ தூரம்!!!!!!!!

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி மறுபடியும் அந்த பிலிபினோ பொம்ணாட்டிகிட்ட போய் பரிதாபமா நின்னேன். இந்த தடவை கையை காட்டாம என் கூடவே வந்து அந்த கான்பரன்ஸ் ஹால் வாசல்ல வந்து ‘இதுதான்டா அசடே!’னு காமிச்சுட்டு போனா.

அந்த ஹோட்டல்காரனை வாய்க்கு வந்தபடி திட்டினேன். ‘கடங்காரன்! என்னதான் உள்ள போய் எல்லாரும் முக்கியமான விஷயம் யோசிக்கரானாலும் கான்பரன்ஸ் ஹாலுக்கும் கக்கூஸுக்கும் ஒரே மாதிரியா கதவை போடுவான்’.அந்த இடம் வேற தொடச்சு வச்ச மாதிரி பளிச்சுனு இருந்தது. வாசல்ல பூரா ஜலமா கொட்டி வச்சு ‘கமகம மணம் கார்டன் பிரஷ்’ஷா இருந்தாதானே நாமளும் கரெக்டா கக்கூஸ்னு கண்டுபிடிக்கமுடியும்! லூசுப்பயலுக!னு சொல்லிண்டே உள்ள போனா அங்க மனசுக்கு இதமான சவுண்ட்ல நம்ப ஊர் கல்யாண வரவேற்பு மாதிரி எதோ ஒரு பாரின் வித்துவான் ஸ்பீக்கர்ல வயலின் வாசிச்சுண்டு இருந்தார். ‘யூரின் போகர இடத்துல பாரின் வித்துவான் இசை ரொம்ப அவசியமா’னு மறுபடியும் திட்ட ஆரம்பிக்காம, ‘போன வேலையை முதல்ல பாப்போம்’னு கதவை திறந்து ஒரு கக்கா ரூமுக்குள்ள போனா அங்க ‘கம கம’னு ஒரே சந்தன செண்ட் வாசனை. மங்கலான வெளிச்சத்துல நாலு மெழுகுவர்த்தி வேற ஏத்தி வச்சுருந்தா. அட லூசுகளா! இது என்ன கக்கூஸா இல்லைனா பர்ஸ்ட் நைட் நடக்கர ரூமா!னு கோபமா வந்தது. ஒரே வேண்டாத வாசனையா இருந்ததால அவசரமா வந்த கக்காவும் கப்சிப்னு ஆயிடுத்து. ‘வெரி பேட் மெயிண்டனஸ் இன் ரெஸ்ட் ரூம் ஏரியா! இன்சைட் டாய்லட் நோ கக்கா மூட் கம்மிங்!’னு சஜஷன் நோட்ல ஆவலாதி எழுதி வச்சுட்டு வந்தேன்.

Thursday, January 24, 2013

லைப் ஆஃப் பை

சினிமாவை தியேட்டர்ல போய் பாத்த காலம் எல்லாம் பிரெஞ்சு தாடியோட பழைய சைக்கிளை ஓட்டிண்டே ‘அந்த வருஷம்’னு ஆரம்பிக்கும் சேரன் மாதிரி பழைய நினைவுகள்ல தான் தேட வேண்டியிருக்கு. ‘பூவே உனக்காக’ படத்துக்கு அம்பாசமுத்திரம் அபிராமி தியேட்டர்ல எங்க தெரு மாமிகள் கூட ‘ஜான் பிள்ளை’ கோட்டால துணைக்கு போயிட்டு விக்ரமனோட க்ளைமாக்ஸ் வசனத்துக்கு மாமிகள் எல்லாம் புழிய புழிய அழுததை பாத்த போது அவாத்து மாமா ஏன் இவாளை சினிமாவுக்கு தனியா அனுப்பி வச்சானு புரிஞ்சது. சினிமா பாத்தே தீரனும்னு கொசமுட்டிண்டு அலையர அளவுக்கு பைத்தியம் இருந்தது இல்லை. எப்பையாவது முட்டினா தப்பினா சினிமா போகர்து வழக்கம். பெண்களூர் போனதுக்கு அப்புறம் கூட விவேக் நகர்ல இருக்கும் பாலாஜி தியேட்டர்ல தான் படம் பாக்க நானும் எங்கண்ணனும் போவோமே தவிர பி வி ஆர்/ஐனாக்ஸ் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டோம். வாசல்ல இருக்கும் செக்யூரிட்டி கைல தீவட்டி மட்டும் தான் இருக்காதே தவிர கொள்ளையடிக்கர்துல அவாளை மிஞ்சமுடியாது. எங்க ஊர் தியேட்டர்ல சாப்பிடர மாதிரியே அச்சு முருக்கும் கடலை மிட்டாயும் ஒரு தடவை கொண்டு போனேன். இதெல்லாம் உள்ள கொண்டு போககூடாதுனு சொல்லி வாசல்லையே வாங்கி வச்சுட்டா. பாப்கார்னை 60 ரூபாய் குடுத்து வாங்கர்துக்கு மனசு வராததால, ஏகாதசி விரதம் இருக்கும் யெச்சுமி பாட்டி மாதிரி ஜலம் கூட குடிக்காம படம் பாத்துட்டு நாங்க வெளில வந்தது ஞாபகம் இருக்கு.

தோஹா வந்ததுக்கு அப்புறம் சுத்தமா டேமை இழுத்து மூடின கர்னாடகா மாதிரி தியேட்டர் பக்கமே போகாம, பக்த பிரகலாதால ஆரம்பிச்சு ஆரண்யகாண்டம் வரைக்கும் ஆன்லைன்ல பாத்து பொழுதை போக்கிண்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் நீ காலிடா மாப்ளே!னு எங்க அண்ணா பயம்குடுத்தின மாதிரி எதுவும் ஆகாம தங்கமணிக்கும் சினிமால பற்று/வரவு எதுவுமே இல்லை. இருந்தாலும் விடாம எதாவது பழைய படத்தை எடுத்து ஆன்லைன்ல போட்டு பாப்போம். இப்படியே ஒரு வருஷத்தை ஓட்டியாச்சு. இந்த நிலைமைல இருந்த போது தான் கல்யாணம் கழிஞ்சு ஒரு வருஷத்துல ஒரு சினிமாவுக்கு கூட தியேட்டர் கூட்டிண்டு போனது இல்லையா?னு மனசாட்சியே மைண்ட்வாஸ்ல பேச ஆரம்பிச்சுடுத்து. அதுக்காக அலெக்ஸ்பாண்டியன் வகையறா படங்களுக்கு கூட்டிண்டு போய் நேரத்தையும் மனசையும் பழாக்க மனசு இல்லை. இந்த சமயத்துல தான் என்னோட தங்மணியோட தோழி ‘லைப் ஆஃப் பை’ படம் பாத்துட்டு வந்து ‘எப்பிடி இருந்தது தெரியுமோ!’னு கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுண்டு மினி பயாஸ்கோப் எங்காத்து ரேளில வந்து ஓடினா. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்னோட ரியாக்ஸன் பாக்கர்துக்கு மேடம் அமைதியா இருந்தாங்க. எப்பிடியாவது இந்த ஆப்புலேந்து எஸ்கேப் ஆகர்துக்காக 'இவாளோட கண் & முகபாவத்தை வச்சு பாக்கும் போது இவாளுக்கு கதகளி தெரியுமோனு தோணர்து! உனக்கு என்ன தோணர்து?னு கேட்டேன். ‘வெஸ்ட் மாம்பலத்துலேயே நல்ல மாப்பிள்ளைக்கு எங்க அப்பா என்னை கல்யாணம் பண்ணி வச்சுருக்கலாம்னு தோனர்து’னு சொல்லிட்டு முகத்தை அந்த பக்கமா வெட்டிண்டா.

வேற வழியே இல்லாம அடுத்த நாள் சாயங்காலம் 7 மணி காட்சிக்கு படத்துக்கு போகலாம்னு சொல்லி கூட்டணி கட்சியை சமாதானம் பண்ணும்படியா ஆயிடுத்து. அடுத்த நாள் தியேட்டர்ல டிக்கெட் கவுண்டர்ல போய் டிக்கெட் விலையை பாத்தா ஷாக் ஆயிடுத்து. உள்ள இருந்த பிலிபினோ பொம்ணாட்டி கிட்ட ‘இங்க போட்டு இருக்கர்து ரெண்டு பேருக்கா?’னு வெக்கமே இல்லாம சந்தேகம் கேட்டேன். 'ஒரு ஆளுக்கு தான் ஆனா உங்களுக்கு போட்டுண்டு பாக்கர்துக்கு 3டி கண்ணாடி தருவோம்'னு சொன்னா. 'எங்களுக்கு கண்ணாடியும் வேண்டாம் காதுமெஷினும் வேண்டாம்னு சொன்னா கொஞ்சம் குறைச்சுப்பேளா?'னு திருப்பி கேட்டதுக்கு அற்ப பதரே!னு சொல்ற மாதிரி மொறச்சா. ஒரு வழியா தியேட்டர் உள்ள போயாச்சு. எங்காத்து ரேளி மாதிரியே நானும் தங்கமணியும் மட்டும் தான் இருந்தோம். ரெண்டே ரெண்டு பேருக்கு படம் போடுவானானு தெரியலையே! படம் போடலைனா பைசாவை திருப்பி தருவா இல்லையோ!னு சந்தேகம் கேட்டுண்டு இருந்தேன். அந்த சமயம் 3 பையன்கள் சகிதமா ஒரு தம்பதிகள் தியேட்டர்குள்ள வந்தா. எங்க ஊர்ல ஆடி பதினெட்டுக்கு தாமிரபரணிக்கு தூக்குசட்டில புளியோதரை கட்டி கொண்டு போகும் கோமா மாமி மாதிரி ஒரு பெரிய பாலிதீன் பை நிறையா பாப்கார்ன்,சிப்ஸ்,பப்ஸ்,பெப்ஸி & இன்ன பிற ஐயிட்டங்கள் சகிதமா வந்து இருந்தா. அதுக்கு அப்புறம் ரெண்டு நண்டு சிண்டுகள் சகிதமா ஒரு குடும்பம் & ஒரு வெள்ளக்கார தம்பதிகள்னு நாலு மனுஷா வந்தா.




கரெக்டா சொன்ன நேரத்துல படத்தை ஆரம்பிச்சுட்டான். படத்தை சுருக்கமா சொல்லனும்னா, பாண்டிச்சேரில ரெண்டு பையன்கள் இருக்கா அவாளோட அம்மா அப்பா ஒரு ஜூ-வை வச்சு நடத்திண்டு இருக்கா. இளைய பையன் உம்மாச்சி யாரு? உம்மாச்சினா என்ன?னு ஞானப்பழம் மாதிரி கேள்வி கேட்டுண்டு கிருஷ்ணால ஆரம்பிச்சு அல்லா வரைக்கும் எல்லா உம்மாச்சியையும் கும்பிடரான். காதல் தேசம் படத்துல அப்பாஸுக்கும் வினித்துக்கும் அக்கா மாதிரி இருந்த தபு இந்த படத்துல அம்மாவா வரா. உள்ளூர் ஜிம்ல கர்லாகட்டை சுத்தரவர் மாதிரி இருக்கும் பையனோட தாய்மாமா நீச்சல் சொல்லிகுடுக்கரார். நம்ப ஊர்ல யாருமே துணையா இல்லைனு சொல்லிட்டு பையனோட அப்பா ஜூ-வை வித்துட்டு அங்க இருக்கும் குரங்கு சிங்கம் புலி சகிதமா கனடாவுக்கு போகர்துனு முடிவு பண்ணரார். போகர வழில புயல் வந்து கப்பல் கவுந்து எல்லாம் பரலோகம் போகும்படியா ஆகர்து. படகுல தப்பிக்க பார்க்கும் நம்ப கதானாயகன் யாரோ ஒருத்தர் தத்தளிக்கர மாதிரி இருக்கர்தை பாத்துட்டு டியூப் டையர் போட்டு படகுக்கு இழுத்தா அது பெங்கால் புலி. சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுண்ட கதையா ஆயிடுத்தேனு ரொம்ப பீல் பண்ணி அதை விரட்டி விடர்துக்கு முயற்சி பண்ணினாலும் மனசு கேக்க மாட்டேங்கர்து. அந்த புலியை கூட வச்சுண்டு ரொம்ப நாளைக்கு கடல்ல பிரயாணம் பண்ணி பிள்ளையாண்டான் எப்பிடி கரை சேரரான் அப்பிடிங்கர்துதான் கதை.

நானும் தங்கமணியும் பார்த்த முதல் 3டி படம் இதுதான் அப்பிடிங்கர்தால ரெண்டு பேருமே பட்டிக்காட்டான் யானையை பாத்த மாதிரி ஆச்சரியமா பாத்தோம். எங்க ஆபிஸ்ல உள்ளவா எல்லாம் ஜெயா டிவில வரும் ஆன்மீக வர்ணனையாளர் ஸ்ரீகவி ‘திருமலையான் வேஏஏஏஏஏங்கடவன்!னு இழுத்து இழுத்து பேசர மாதிரி நிதானமா தான் இங்க்லிபீஷ் பேசுவா, ஆனா இந்த படத்துல இங்கிலீஷ் வசனங்கள் ரொம்ப வேகமா இருக்கர்தால பக்கத்து சீட்ல இருந்த வெள்ளைக்காரி சிரிக்கும் போதெல்லாம் நானும் சிரிச்சு ஒப்பேத்திண்டு இருந்தேன். சில சமயம் வெள்ளக்காரி சிரிக்காத எடுத்துல கூட கொஞ்சம் சிரிச்சு ‘வாட் இஸ் தாட்? வாட் இஸ் தட்?’னு அவாத்துகாரர்கிட்ட கேட்கும்படியா பண்ணியாச்சு. நடுல நம்ப பையன் மிருதங்கம் வாசிச்சுண்டே பரதம் ஆடர ஒரு பொண்ணை சைட் அடிக்கர சீன் வந்த போது எனக்கு சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியலை. கெக்கெபிக்கேனு தனியா சிரிச்சுண்டு இருந்தேன். இதுல சிரிக்கர்துக்கு என்ன இருக்கு?னு கேட்கரமாதிரி தங்கமணி என்னை பாத்தா. கல்லிடை அம்பை சம்பந்தமான ஒரு காதல் காவியத்துல இது ஒரு முக்கியமான சீன் அப்பிடிங்கர்து எனக்கு மட்டும் தானே தெரியும். அது ஏன் இந்த மிருதங்கம் வாசிக்கர பசங்க எல்லாம் டான்ஸ் ஆடர பிகர்களுக்கு நூல் விடரா?னு டவுட் கேட்டதுக்கு ‘புளுபுளுனு பேசாம படத்தை பாருங்கோ!’னு சொல்லிட்டா.

படம் ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு, முக்கியமா கடல்ல வச்சு படமாக்கின பயணக்காட்சிகள்,தனித் தீவு,திமிங்கலம் மேல வரும் காட்சி,தேவாங்கு மாதிரியான பிராணி உள்ள தீவு எல்லாமே டாப் டக்கர். 3டில பாக்கர்தால பறவை நம்ப பக்கத்துல பறந்து போகர்து,குரங்கு நம்ப பக்கத்துல வந்து போகர்து,புலி நம்ப மேல பாயரமாதிரி வரர்துனு எல்லாமே அதிசயமா இருக்கு. புலி பாய்ஞ்சு பாய்ஞ்சு வரும் போது எல்லாம் மேடம் என்னோட சீட்டை பிடிச்சு உலுக்கிண்டு இருந்தாங்க. படம் பாத்துட்டு திரும்பி கார்ல வந்துண்டு இருக்கும் போது, ‘புலி நம்ப மேல பாயவரமாதிரி இருக்கும் போது உங்களுக்கு பயமாவே இல்லையா? நம்ப பக்கத்துல இருந்த வெள்ளக்கார தம்பதிலையும் வெள்ளக்காரிதான் கத்தினா வெள்ளக்காரர் கத்தவே இல்லையே’னு அடுக்கிண்டே போனாங்க. ‘கல்யாணம் கழிஞ்ச ஆம்பளேலுக்கு சிங்கம் புலி பாயர்து கோபமா உலுக்கர்து எல்லாம் ஏற்கனவே பழகின விஷம்கர்தால பயப்படமாட்டா’னு நான் பதில் சொன்னதுக்கு அப்புறம் புயலுக்கு முந்தைய அமைதி கார்ல நிலவியது.

Thursday, January 17, 2013

அவுத்து விட்ட கழுதை 5

Part 4


குருவாயூர் போயிட்டு வந்து நாலு நாள் கல்லிடைல இருந்தோம். எங்க ஊர்காராளுக்கு அவாத்து விஷயம் ஒரு வண்டி இருந்தாலும் அடுத்தாத்து சமாசாரங்கள்ல அலாதி பிரியம். 'ஏதுடா தக்குடு! ஆத்துக்காரியை கூட்டிண்டு எதாவது ஊருக்கு போயிட்டு போயிட்டு வந்துண்டு இருக்கை? எதாவது வீடு/கீடு/இடம் வாங்கராப்ல இருக்கையோ?'னு பொழுதுபோகாத பக்கத்தாத்து மாமி பல்ஸ் பாக்கர்த்துக்கு முயற்சி பண்ணினா. 'ஆமாம் மாமி! பாபனாசம் போகர வழில நடுகாட்டுல 2 கிரவுண்ட் இடம் சகாய விலைல வந்துருக்கு அதைதான் போய் போய் பாத்துட்டு வந்துண்டு இருக்கோம்'னு சொன்னதுக்கு அப்புறம் சத்தம் காட்டாம இடத்தை காலி பண்ணினா. ஊருக்கு போன சமயம் நம்ம ப்ளாக் நண்பர் துபாய் ராஜாவும் இந்தியா வரர்தா இருந்தது. கல்லிடைல வந்து மீட்பண்ணறேன்னு சொல்லியிருந்தார் ஆனா கடைசில லீவு கிடைக்காததால வரமுடியலை பாவம். திடீர்னு ஒரு நாள் நான் வீட்ல இல்லாத நேரம் போன் பண்ணி 'துபாய் ராஜா சிங்கபூர்லேந்து பேசரேன்'னு எங்கம்மாகிட்ட சொல்லியிருக்கார். 'தக்குடு ராத்ரி சாப்பிடர்துக்குதான் ஆத்துக்கு வருவான் அப்ப பண்ணுங்கோ!'னு சொல்லி அம்மா போனை வச்சுருக்கா. ‘பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைனாலும் தோஹா மந்திரி/துபாய் ராஜா/கனடா ராஜகுமாரினு பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’னு எங்கப்பா சாப்பிடும் போது சொல்ல ஆரம்பிச்ச உடனே ‘ஆஹா எந்த பயபுள்ள போன் பண்ணிச்சு தெரியலையே?’னு யோசனையா இருந்தேன். கரெக்டா நம்ப துபாய் ராஜா போனை போட்டு அதை எங்கப்பா எடுத்துட்டு ‘இந்தாடா தோஹா ராஜா! துபாய் ராஜா லைன்ல இருக்கார் வந்து பேசு!’னு நக்கல் அடிச்சதுல என்னோட தங்கமணிக்கு பரமதிருப்தி.


துபாய் ராஜாவும் நானும் ஒரு நாற்பது நிமிஷம் பேசி இருப்போம். தங்கமான மனுஷன் குழந்தை மாதிரி பேசினார். பேசி முடிச்சுட்டு பெருமையா ‘ஐயாவுக்கு சிங்கபூர்லேந்து கால் பண்ணி பேசரா பாத்தியா?’னு பார்வையாலையே அம்மா/அப்பாவை ஒரு லுக்கு விட்டேன். ‘முக்கால்மணி நேரமா பேசர்தை பாத்தா கால் சிங்கம்பட்டிலேந்து வந்த மாதிரினா இருக்கு’னு சொல்லி க்ளீன் போல்ட் ஆக்கினது அப்பா தான். நானும் ரிச்மெண்ட்லேந்து கவினயா பேசினாக! கனடாலேந்து இட்லிமாமி பேசினாக! அபுதாபிலேந்து அனன்யா பேசினாக! சொன்னாலும் நம்பர்துக்கு யாரும் தயாரா இல்லை. ரைட்டு விடு நம்ப முகராசி அப்பிடி!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். ஊர்ல இருக்கரவரைக்கும் கல்யாணம்/காதுகுத்து இந்த மாதிரியான விஷேஷங்களோட மகிமை நமக்கு தெரியர்து இல்லை, வெளி நாட்டுல எங்கையாவது வசமா சிக்கினதுக்கு அப்புறம் தான் லீவுல ஊருக்கு போகும் போது ‘எவனாவது கல்யாணம்/காட்சினு எதாவது வைக்கனும் கடவுளே! அறுபதாம் கல்யாணமா இருந்தா கூட ஓக்கேதான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறேன்னு வேண்டிகிட்டு போவோம். என்னோட கல்யாணத்துக்கு போன வருஷம் ஊருக்கு வரும்போது கூட ‘ஹைய்யா ஜாலி கல்யாணம்!’னு ஊருக்கு கிளம்பி போனபோது, ‘பாவம்! உலக நடப்பு தெரியாம விட்டில்பூச்சியா இருக்கானே இந்த பிள்ளை!’னு தோஹால இருக்கும் மாமாக்கள் எல்லாம் வருத்தப்பட்டா.


மதுரைல ஒரு ப்ளாக் நண்பருக்கு கல்யாணம். மதுரைல போய் கல்யாணத்துக்கு போனா அங்க ப்ளாக் மனுஷா ஒருத்தரையும் காணும். ‘திருப்பதில பாம்பு வந்த கதையை எட்டணா போஸ்ட் கார்டுல எழுதி 80 பேருக்கு போஸ்ட் பண்ணின மாதிரி எல்லாருக்கும் காப்பி பண்ணி மெயில் அனுப்பினையேடா ஒருத்தரும் வரலையா!’னு ஹீன குரல்ல மாப்பிள்ளைகிட்ட கேட்டேன். ‘எல்லாரும் கடைசி சமயத்துல கவுத்திட்டா! ஜானுவாசத்துல பால்பாயாசம் விடுவானு சொன்னதால முகூர்தத்துக்கு வரவேண்டிய அனன்யாக்கா ஜானுவாசத்துக்கே வந்துட்டு போய்ட்டா!’னு பொலம்பினான். தெரிஞ்சமனுஷா யாராவது இருந்தா அவா கழுத்தை அறுக்கலாம்னு பாத்தா ஒருத்தரும் இல்லை. அப்புறமென்ன, இலை போடரவரைக்கும் யாரோ ஒரு மெட்ராஸ் மாமா என்கிட்ட மொக்கை போட்டுண்டு இருந்தார். முந்தின நாள் சாயங்காலமே மதுரையோட செல்லக்கிளி மீனாட்சியை போய் தரிசனம் பண்ணிட்டு வந்துட்டதால மத்யானமே திருச்சிக்கு கிளம்பினோம். ரெங்க நாத ஷேத்ரத்துல நம்ப அம்பத்தூர் கீதா மாமி சமீபத்துல தான் குடிவந்துருக்கர்தா கேள்விப்பட்டதால மாமியாத்துக்கு போலாம்னு முடிவு பண்ணினோம். திருச்சிலேந்து ஸ்ரீரெங்கம் வந்து பாலம் தாண்டும் போது தான் போன் பண்ணி மாமி உங்காத்துக்கு வர எந்த பஸ் ஸ்டாப்ல இறங்கனும்னு கேட்டா. அம்மா மண்டபத்துல இறங்கு தக்குடு!னு பதில் வந்தது. புரட்சித்தலைவி இந்த தொகுதியை ஏன் தேர்தெடுத்தார்னு அப்பதான் புரிஞ்சது.


ஒரு ஆட்டோவை பிடிச்சு கீதாபாட்டியாத்தை கண்டுபிடிக்க முயற்சி பண்ணினேன். ‘ஒரு ஏ டி எம் மெசின் இருக்கு பாரு! அப்புறம் ஒரு கல்யாண மண்டபம்! ரைட் சைடுல ஒரு முடுக்கு!’னு மாமி போன்ல சொல்லிண்டே வந்தா. ‘எல்லாம் இருக்கு மாமி உங்க அபார்ட்மென்ட் எங்க இருக்கு அதை சொல்லுங்கோ!’னு கேட்டேன். ஒரு வழியா கல்யாணமண்டபத்துக்கு எதிர்பக்க கட்டிடம் வந்தது. கீழ இறங்கி செக்யூரிட்டி கிட்ட இங்க ஒரு பாட்டி மெட்ராஸ்லேந்து....னு ஆரம்பிக்கர்துக்குள்ள ‘மாமா சொன்னதையே கேக்காம தொணதொணனு பேசிண்டே இருப்பாங்களே அந்த பாட்டியா?’னு கரெக்டா கேட்டார். அவரே தான்னு கன்பார்ம் பண்ணிண்டு அவாத்துக்கு போனா மாமிக்கும் மாமாவுக்கும் பரமசந்தோஷம். திடீர்னு ரெங்கம் ஸ்தல புராணம் சொல்ல ஆரம்பிச்சுட்டா. சுமாரா முக்கால்மணி நேரம் பேசி முடிச்சதுக்கு அப்புறம் ‘இப்ப நேரம் இல்லை அதனால சுருக்கமா சொல்லிட்டேன்’னு அந்த மாமி சொல்லும்போது தங்கமணி மிரண்டு போய் இருந்தா. அப்புறம் ரூம்ல போய் குளிச்சு திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை தரிசனம் பண்ணர்துக்கு ரெடி ஆயிண்டு இருந்தபோது, ‘ஏஏஏ அப்பா! அந்த மாமி எவ்ளோ விஷயம் சொல்லறா!’னு ஆச்சர்யப்பட்ட தங்கமணி கிட்ட ‘இதெல்லாம் அந்த மாமிக்கு ஜுஜூப்பி! காசில ஆரம்பிச்சு ராமேஸ்வரம் வரைக்கும் தலபுராணம் சொல்லுவா. சிலசமயம் எல்லாத்தையும் ஒரே சமயத்துல சொல்ல முயற்சி பண்ணி நம்பளையும் சேர்த்து குழப்பி விட்டுருவா அதுதான் கொஞ்சம் பிரச்சனை! ஆனா அந்த மாமிக்கு இருக்கும் சுறுசுறுப்பு யாருக்கும் வராது! புதுசு புதுசா விஷயம் கத்துக்க குழந்தை மாதிரி ஆசைபட்டு கத்துப்பா. எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துண்டு நம்ப மேல பாசம் காட்டுவா!’னு சொன்னேன்.



ரெங்கனின் கோபுரம்


திருவானைக்கா கோவில் ரொம்ப பெரிசா இருந்தது. உள்ள போக போக வந்துண்டே இருந்தது. தாடங்க மகிமை உள்ள ஷேத்ரம் அப்பிடிங்கர்து இதோட சிறப்பு. சுவாமி அனுக்கிரஹத்துல கூட்டம் இல்லாம இருந்ததால ஒரு தடவை லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லி பிரார்த்தனை பண்ணமுடிஞ்சது. பஞ்சபூத ஸ்தலத்துல இது ஜல ஸ்தலம். ரொம்ப நேரம் கோவில்ல தான் இருந்தோம். அதுக்கப்புறம் கீதாமாமியாத்துக்கு திரும்பி வந்தோம். மாமியாத்து மாடிலேந்து பாத்தா ஒரு பக்கம் உச்சிபிள்ளையார் கோவில், ஒரு பக்கம் ரெங்கனாதர் கோவில் கோபுரம், ஒரு பக்கம் திருவானைக்கா கோவில் கோபுரம் & ஒரு பக்கம் காவிரி ஆறும் தெரியர்து. அடுத்த நாள் காத்தால சீக்கரமே கிளம்பி கோவிலுக்கு போகனும்னு முடிவு பண்ணினோம். அர்த்தராத்ரி 3.30 மணிக்கே எழுந்து குளிச்சுட்டு மாமா/மாமி கிட்ட சொல்லிண்டு கோவிலுக்கு நடக்க ஆரம்பிச்சோம். கோவில் ரெங்கா கோபுரம் வாசல்ல நீளமா ஒரு க்யூ. எனக்கு ரூபாய் குடுத்து அந்த வரிசைல போய் சாமி பாக்கர்துல உடன்பாடு கிடையாது. அதனால எந்த கோவில் போனாலும் கொஞ்ஜம் நேரம் ஆகும். வரிசைல ஊர்ந்து ஊர்ந்து போகும்போது ஒரு லோக்கல் மாமா ப்ரெண்ட் ஆனார். ஒரு கைடு மாதிரி அவர் எல்லா விஷயமும் சொல்லிண்டே வந்தார். அந்த ஊர்ல கீதா மாமி குடும்பம் & அந்த கோவில் மாமாவோட உபகாரம் ரொம்ப செளகர்யமா இருந்தது. கடைசில ஸ்ரீரெங்க நாயகனையும் ஸ்ரீரெங்க நாயகியையும் கண்குளிர தரிசனம் பண்ணினோம்.


அதுக்கு அப்புறம் மிச்சம் இருந்த நாட்களை கல்லிடை மெட்ராஸ்னு கழிச்சுட்டு தோஹா கிளம்பி வந்தாச்சு! பொறுமையா ஐந்து பாகம் அவுத்துவிட்ட கழுதையை படிச்சு ஆதரவு குடுத்த எல்லா அன்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

Thursday, January 10, 2013

அவுத்து விட்ட கழுதை 4


Part 1 Part 2 Part 3


கல்லிடைல போய் இறங்கின சமயம் தாமிரபரணில நிறைய ஜலம் இருந்தது. பாத்ரூம்/பக்கெட்/பிளாஸ்டிக் மஃக்னு பழகி போன மெட்ராஸ் வாசியான என்னோட சரிபாதியை கூட்டிண்டு ஆத்தங்கரைக்கு கிளம்பியாச்சு. ‘ஆத்தங்கரை மரமே! அரசமர இலையே! ஆரம்பிச்சு ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ வரைக்கும் இந்த ஆத்தங்கரைல எடுத்த பாட்டுதான் தெரியுமா?னு தாமிரபரணி மகாத்மியத்தை சொல்லிண்டே குளிக்கர இடத்தை அடைஞ்சோம். ஸ்படிகமா இருந்தது ஆத்தங்கரை ஜலம். சுகமா ஒரு குளியலை போட்டேன். திடீர்னு ஒரு அலறல், என்னடாப்பானு திரும்பி பாத்தா மேடம் தான் கத்தினது. ‘நீங்க மீன் கடிக்காது சொன்னேளே’னு பரிதாபமா கேட்டாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி ‘எங்காத்து பொண் பரமசாது’னு உங்க அப்பா கூட அள்ளிவிட்டார் நான் நம்பலையா?’னு மனசுக்குள்ள நினைச்சுண்டேன். இதே மாதிரி தான் சில வருஷங்களுக்கு முன்னாடி என்னோட கல்லிடை வந்த கிண்டி மாமாவும் மீன்கடிக்கு பயந்து துள்ளிகுதிச்சு ஓடினார். குளிச்சுட்டு வரவழில கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பச்சை நிறமே பச்சை நிறமேனு பாடும்படியா இருந்தது. வானத்தோட நீல நிறம், நடுல நடுல கொஞ்சம் வெள்ளை மேகம், தூரத்துல தெரியும் ஆத்தங்கரை பாலத்துல ஊர்ந்து போகும் பஸ்/லாரி, இதமான பொதிகைமலை காற்றுனு ரொம்ப ரம்மியமா இருந்தது.


ஆத்தங்கரை போகும் வழி


வர வழில எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி வட்டிக்காரன் மாதிரி என்னை பிடிச்சுண்டுட்டா. ‘ஏ தக்குடு எப்பிடி இருக்கை? உங்க ஊர்ல எல்லாரும் செளக்கியமா? பெங்களூர்ல நம்பாத்து ஜனனியை மடிவாலால வச்சு பாத்தையாமே?’னு வரிசையா பேசிண்டே இருந்தா. ‘ஆமாம் மாமி! உங்காத்து பொண்ணரசியை பாத்தேன். நம்ப ஊர்ல இருந்த வரைக்கும் கத்திரிக்கா நறுக்கர நைஃப் மாதிரி இருந்தா இப்ப பெங்களூர்ல கத்ரினா கைஃப் மாதிரி இருக்கா’னு நானும் மூச்சு விடாம பதில் சொல்லிட்டு நகர்ந்தேன். போய் இறங்கி ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள நானும் தங்கமணியும் குருவாயூர் கிளம்பியாச்சு. குருவாயூர் போகனும்னு ரொம்ப வருஷமாவே நினைச்சுண்டு இருந்தேன், போதாக்குறைக்கு மேடமும் இந்த வருஷம் குருவாயூர் கூட்டிண்டு போவேளா?னு கேக்கவும் டபக்குனு டூர் ப்ளான்ல சேர்த்துட்டேன். திருனவேலி போய் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ல ஏறியாச்சு. காத்தால அஞ்சு மணிக்கே எனக்கு முழிப்பு வந்துடுத்து. வெளில நன்னா மழை பெஞ்சுண்டு இருந்தது. எல்லாரும் தூங்கிண்டு இருக்கும் போது தனியா உக்காச்சுண்டு ஜென்னல் வழியா வேடிக்கை பாத்துண்டு வரர்து ஒரு தனி சுகம். அதுவும் அதிகாலை பொழுதா இருந்தா கேக்கவே வேண்டாம். காத்தால ஆறு இருபது மணிக்கு குருவாயூர் ஸ்டேஷன் வந்துருந்து.

பரபரப்பே இல்லாத சின்ன அழகான ஊர் குருவாயூர். ரயில்வே ஸ்டேஷன்லேந்து கோவில் ரொம்ப பக்கத்துல தான் இருக்கு. ஆட்டோ பிடிச்சாலும் இருபது ரூபா தான் ஆகர்து. புக் பண்ணி வச்சுருந்த ரூமுக்கு போய் மடமடனு குளிச்சு நான் ரெடி ஆயிட்டேன். ஒரு வழியா அரைமணி நேரத்துல அம்மணியும் ரெடி. புது வேஷ்டி, அங்கவஸ்திரம், கோபி சந்தனமுமா நின்னுண்டு இருந்த என்னை பத்து வினாடி மேடம் கண்கொட்டாம பாத்தாங்க. நானும் பெருமை தாங்காம ‘என்ன அசப்புல பாக்கர்த்துக்கு பாலக்காட்டு மாதவன் மாதிரி இருக்கா?’னு அங்கவஸ்திரத்தை சரிபண்ணிண்டே கேட்டேன். ‘பஞ்சவாத்ய கோஷ்டில ஜெண்டமேளம் வாசிக்கரவர் மாதிரி இருக்கு’னு சொல்லிட்டு ஒரு நக்கல் சிரிப்பு. இந்த பொம்ணாட்டிகளே இப்படித்தான் மனசால ரசிச்சதை வாய் நிறைய பாராட்டவே மாட்டா. ஆம்பளேள் தான் லூசு மாதிரி ‘தேவதையா இருக்கை! அப்பிடியே அள்ளிண்டு போராடா!’னு தகுதிக்கு மீறி பாராட்டிடறோம். ‘சரி சரி விடுடா சூனா பானா! உன்னோட அழகு யாருக்கு வரும்!’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டு கிளம்பினோம்.


பூ கோலம்


ஓணத்துக்கு 2 நாள் முன்னாடி நாங்க குருவாயூர்ல இருந்ததால எங்க பாத்தாலும் ஒரே பூ கோலமா இருந்தது. பொம்ணாட்டிகள் தலை நிறையா பூ வச்சுண்டா ஒரு தனி அழகுதான்னு சொல்லிண்டே ஆசையா ஒரு முழம் பூ வாங்கி தரலாம்னு பூக்காரர்ட விலை கேட்டா அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயோட மதிப்பை சொன்னார். இதுக்கு மேல வாங்கிதரலைனா ‘ஒரு முழம் பூ வாங்கி தர வக்கு இருக்கா?’னு தங்கமணி கேட்காட்டாலும் பூக்காரர் கேட்ருவார்னு பயந்து அவருக்கு தண்டம் அழுதேன். கேரளா கோவில்களுக்கே உண்டான தனிச்சிறப்பு அதோட கட்டுப்பாடுகள் தான். கோவில் விதிகளை யாருக்காகவும் விட்டுக்குடுக்கமாட்டா. யாரா இருந்தாலும் ஒரே ஒரு வரிசை தான். சினிமா தியேட்டர் மாதிரி 50 ரூபாய் வரிசை 300 ரூபாய் வரிசை அங்க கிடையாது. வரிசைல போகக்கூடிய ஆட்கள்ல பாதி பேர் கைல எதாவது ஒரு உம்மாச்சி புஸ்தகம் இருக்கு. வளவளனு வம்பு பேசிண்டு போகக்கூடியது நாம மட்டும் தான். அதே மாதிரி சுத்தமா குளிச்சு, நெத்தில சந்தனம் குங்குமம் இட்டுண்டு, கோடி வஸ்த்ரம் கட்டிண்டு பயபக்தியா வரும் மக்களை பாக்கர்துக்கே ஆசையா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வரிசை நகர்ந்து சன்னதிக்குள்ள போனோம். சுந்தரவதனன் மயில்பீலி அசைய மஞ்சள் பட்டாடை பளபளக்க பூமாலைகள் சூடி தீப ஒளியில் குழந்தையாய் காட்சி அளித்தான். சிலவினாடிகள் சில யுகங்கள் பெறும்னு சொல்லும்படியா சில வினாடிகள் கண்ணில் தோன்றி மறைந்த அந்த மாயாவியின் அழகில் மயங்கித் தான் போனோம்.

வெளில வந்ததுக்கு அப்புறம் ஒரு ஹோட்டல்ல ஆகாரம் பண்ணிட்டு ரூமுக்கு போய் டிரெஸ் மாத்திண்டு பக்கத்து ஊரான பாலக்காட்டுக்கு கிளம்பினோம். பாலக்காட்டுல எனக்கு தெரிஞ்ச ஒரு ஸ்னேகிதர் இருக்கார். பஸ்ஸோட சைஸ்லையும் இல்லாம மினிபஸ் அளவுக்கு சின்னதாவும் இல்லாம மத்யமமான ஒரு சைஸ்ல நாங்க போன பஸ் இருந்தது. தகரடப்பா மாதிரி பஸ் இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல வில்லனை துரத்தும் ஹீரோ மாதிரி சிட்டா பறந்தது வண்டி. போகர வழில ரோட்ல யாராவது அகஸ்மார்த்தா கஷ்கத்தை சொறியர்துக்கு கையை தூக்கினா கூட டிரைவர் உடனே ஒரு ஸ்டடன் ப்ரேக் போட்டு ‘வா வா!’னு அழைக்கரார். போகும் வழி முழுக்க காடும் மலையுமா இருக்கு. ஊருக்கு உள்ள இருக்கும் வீடுகளை காட்டிலும் கிராமங்களுக்கு நடுல வரும் மொரட்டு பங்களா வீடுகள் கண்களை மிரட்டர்து. வளைகுடா நாடுகளோட வளமை அந்த வீடுகள்ல பிரதிபலிக்கர்து. பாலக்காட்டுல யாராவது ‘போனாமாக்கும்,வந்தோமாக்கும்’னு பாலக்காடு ஸ்டைல்ல பேசிண்டு இருக்காளானு காதை தீட்டி வச்சுண்டு போனேன். பாலக்காட்டுல இருக்கும் போது தோஹால இருக்கும் ஒரு அக்காவையும் நம்ப அனன்யா அக்காவையும் நினைச்சுண்டே இருந்தோம்.

பாலக்காட்டுல சாயங்காலம் வரைக்கும் நண்பர் ஆத்துல பேசிண்டு இருந்துட்டு மறுபடியும் குருவாயூர் கிளம்பி வந்தோம். அடுத்த நாள் காத்தால 4 மணிக்கு முன்னாடி சுவாமி தரிசனம் பண்ணனும்னு நினைச்சோம் ஆனா செல்போன் அலாறம் அடிக்காம அழிச்சாட்டியம் பண்ணி ஏழு மணிக்கு போகும்படியா ஆயிடுத்து. மலபார்ல இருக்கும் எல்லா நகைகடை விளம்பரத்துலையும் வரும் அழகிகள் மாநாடு எதாவது நடக்கர்தோ!னு நாங்க வாயை பொழக்கும்படியா தங்கத்துல மாங்காமாலை தேங்காமாலை காசுமாலை போட்ட ஏகப்பட்ட கல்யாணஜோடிகள் கோவில் வாசல்ல கல்யாணம் பண்ணிக்க செட்டு செட்டா நின்னுண்டு இருந்தா. ‘என்னோட கையை நன்னா கெட்டியா பிடிச்சுக்கோ! எதாவது ஓமணக்குட்டி கூட்ட நெரிசல்ல என்னை ஆத்துக்காரர்னு நினைச்சு கூட்டிண்டு போயிடபோரா!’னு தங்கமணிக்கு எச்சரிக்கை பண்ணினேன். ‘ஓசில குடுத்தாலும் உங்களை ஓமணக்குட்டியோட அம்மா கூட திரும்பிபாக்கமாட்டா!’னு பதில் சொல்லி பழிப்பு காட்டினா. அதுக்கு அப்புறம் பக்கத்துல இருக்கும் ஆனைக்கோட்டைக்கு போனோம். திரும்பின பக்கம் எல்லாம் யானையா இருந்தது. சுமாரா 50 - 60 யானை பாத்து இருப்போம். யானை,ரயில் & வானவில் இதை எல்லாம் எத்தனை தடவை பாத்தாலும் அலுக்காது. யானை ஷவர் பாத் எடுக்கர்து,ஊசி போட்டுக்கர்து,மம்மு சாப்பிடர்து,விளையாடர்துனு எல்லா வேடிக்கையையும் பாத்துண்டு இருந்தோம்.

அடுத்த போஸ்ட்ல மதுரை திருச்சி போன கதை என்னாச்சுனு பாப்போம் கேட்டேளா!