Thursday, September 22, 2011

கல்லிடை காஸ்மோபொலிடன்

முந்தைய பாகங்கள் படிக்க Part 1 Part 2

'பெங்களூர்ல எங்க தங்கினாய்?'னு யாரோ போன போஸ்ட்ல கேட்டு இருந்தா. ஒரு அக்காவாத்துல தான் தங்கி இருந்தேன். என்னோட சொந்தக்காராளாத்துல கூட அவ்ளோ அழகா உபசாரம் பண்ணுவானு சொல்லமுடியாது. இந்த அக்கா & அத்திம்பேர் ரெண்டுபேருமே ஓசி பேப்பர் வாசிக்கரவா. “போஸ்ட் & கமண்ட் எல்லாம் படிச்சுட்டு சிரிப்போம், ஆனா கமண்ட் போடமட்டும் மறந்துபோயிடர்து தக்குடு!”னு சொல்லுவா. மத்தியானத்துக்கு அழகா பொரிச்சகுழம்பும் தேங்காயிட்ட கீரையும் பண்ணியிருந்தா. “கமண்ட் எல்லாம் வேண்டாம் அக்கா, அதுக்கு பதிலா அடுத்த தடவையும் இந்த பொரிச்சகுழம்பு & தயிர் கிச்சடியை மறக்காம பண்ணிடுங்கோ!”னு சொல்லிட்டேன். சிருங்கேரினு சொன்னாலே என்னோட உடம்பும் மனசும் புத்துணர்ச்சி ஆயிடும். பெங்களூர்ல இருந்த வரைக்கும் வருஷத்துக்கு 2 தடவையாவது போயிட்டு வந்துண்டு இருந்த ஒரு ஸ்தலம். சில சந்தோஷங்களை வார்த்தையால வர்ணிக்கமுடியாது, அதை அனுபவிச்சாதான் புரியும். சிருங்கேரி அந்த வகையை சேர்ந்தது. சிருங்கேரியின் சிறப்பை தனி பதிவா உம்மாச்சி ப்ளாக்ல போடலாம்னு இருக்கேன்.

சிருங்கேரிலேந்து மறுபடியும் பெண்களூர் வந்தேன். பெங்களூர்ல இருந்தது 2 நாள் ஆனா 4 நாளைக்கு பண்ண வேண்டிய வேலையை ப்ளான் பண்ணிண்டு போயிருந்தேன். கடைசில எங்க தாத்தா அடிக்கடி சொல்லும் மலையாள வசனமான "பட்டி சந்தைக்கு போன கதை" ஆயிடுத்து. சந்தைக்குள்ள நாய் இடுப்பை இடுப்பை ஆட்டிண்டு அவசர அவசரமா போகுமாம், ஆனா அது வாங்கவும் செய்யாது, விற்கவும் செய்யாது. அது மாதிரி சிலபேர் கைவீச்சும் கால்வீச்சுமா போவா ஆனா ஒரு காரியமும் பாக்காம திரும்பவருவா. என்னோட கதையும் அப்பிடி ஆயிடுத்து. பெங்களூர்ல இருக்கும் ஆழ்வார்குறிச்சி மாமா & வி. கடவுள் ஆத்துக்கு ஆசை ஆசையா கூப்பிட்டு இருந்தா. இந்த களோபரத்துல ரெண்டு பேராத்துக்கும் போகமுடியலை. ஆழ்வார்குறிச்சி மாமா “எங்காத்து பிளாட்டுலேந்து பாத்தா ஸ்விம்மிங் பூல் தெரியும் தக்குடு!”னு ஸ்பெஷல் ‘ஹிண்ட்’ எல்லாம் குடுத்து இருந்தார். ஹும்ம்ம்ம்ம்! அவாத்து மனுஷாளை பாக்கர்த்துக்காக இல்லாட்டியும் அந்த ஸ்விம்மிங் பூலுக்காகவாவது ஒரு எட்டு போயிட்டு வந்து இருக்கலாம். என்ன பண்ணர்து.... எங்க ஊர் கோமா மாமி சொல்ற மாதிரி "ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க". அடுத்த தடவை பெங்களூர் போகும் போது என்ன ஆனாலும் அந்த ஸ்விம்மிங் ஃபூலுக்கு... oopss!! மன்னிக்கவும், அந்த மாமாவாத்துக்கு போயிட்டுதான் வரணும்.

கிஷ்கிந்தா காண்டம் முடிஞ்சு சுந்தர காண்டம் வந்த கதையா நானும் பத்து நாள் சதுர்த்தி உத்ஸவத்துக்கு நடுல கல்லிடையை பார்க்கும் ஆர்வத்தோட கல்லிடை காஸ்மோபொலிடனை நோக்கி பிரயாணத்தை தொடர்ந்தேன். அடியேன் போய் சேரும்போதே இரண்டாவது நாள் சதுர்த்தி உத்ஸவம் நடந்துண்டு இருந்ததால தெரு முழுசும் பெரிசு பெரிசா கன்யா கோலம் & பாதி தெருவுக்கு பந்தல்னு ஒரே அமர்களமா இருந்தது. “துபாய்க்கும் கல்லிடைக்கும் சீஸன் டிக்கெட் எடுத்துருக்கையாடா தக்குடு!”னு ஒரு மாமி வயத்தெரிச்சல் பட்டா. நானும் லக்ஷத்தி எட்டாவது தடவையா “நான் இருக்கர்து துபாய் இல்லை தோஹா!”னு அந்த மாமிட்ட சொல்லிண்டு இருக்கும் போதே “துபாய்லேந்து எப்ப வந்தைடா?”னு ‘சூப்பர்’ மாமா கேட்டார். அவாத்து மாமி யூஸ் பண்ணர பினாயிலை கூட “சூப்பர் பினாயிலாக்கும்”னு பீத்தர்தால அந்த மாமாவுக்கு ‘சூப்பர் மாமா’னு பத்து வருஷம் முன்னாடி எங்க தெருல பேர் வச்சா.



கன்யா கோலம்!!

தெருல ஒரு கோட்டை வம்பு இருந்தது. உள்ளதுலையே டாப் மோஸ்ட் ‘சந்தனகும்பா’ மாமியாத்து சண்டை தான். நம்ப ‘சந்தனகும்பா’ மாமிக்கும் அவாளோட நாட்டுப்பொண்னுக்கும் சண்டை மண்டை உடையர்து. மே மாசம் கூட ரெண்டு பேரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாதிரி கழுத்தை கட்டிண்டு இருந்தா, இப்ப என்னவோ ஜெவும் விஜயகாந்தும் மாதிரி இருக்கா. “நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு நாளு தூங்கமாட்ட!”னு வீரவசனம் எல்லாம் இரண்டு பேரும் பரஸ்பரம் பரிமாறிக்கரா. இவா ரெண்டு பேரோட சத்தம் ஜாஸ்தியா இருந்ததாலையோ என்னமோ இந்த தடவை கூம்பு ஸ்பீக்கர் & மைக் செட்டு எதுவுமே பந்தல்ல கட்டலை. காத்தால சமயம் எல்லாம் ‘காவிய புதன்’ மாதிரிதான் ரெண்டு பேரும் நடமாடரா, சாயங்காலம் ஆயாச்சுன்னா ‘அதிரடி’ வியாழனா மாறிடரா. பகவான் தான் காப்பாத்தனும் அவாத்து ஆம்பிளேளை. தெருல இருக்கும் மாமா மாமிகள் எல்லாம் திருமதி. செல்வம்,அத்திப்பூக்கள், நாதஸ்வரம் சீரியல்ல வரும் கதையை பேசிக்கர மாதிரியே இவா கதைல இன்னிக்கி என்ன திருப்பம்?னு பேசிக்கரா.

தெருக்குள்ள மெட்ராஸ் ஐ மாதிரி ஒரு வியாதி எல்லா மாமிகள்கிட்டயும் பரவி இருக்கர்தால நம்ப ‘குண்டல’ கோமா மாமி பயங்கர மூடவுட்ல இருந்தா. எல்லா மாமிகளும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு லாந்தர்து தான் கோமா மாமியோட மூடவுட்டுக்கு காரணம். ‘ஜிமிக்கி போட்டா 10 வயசு குறைச்சு காட்டும்’னு ம@#$ர் மலர்ல யாரோ கிளப்பிவிட்டதை நம்பி எல்லா மாமிகளும் ‘உஜாலாவுக்கு மாறிட்டோம்’ மாதிரி மாறியிருக்கா. ‘கட்டுகுட்டு’னு இருக்கரவா எல்லாரும் எப்பிடி நமிதா ஆகமுடியாதோ, அதேமாதிரி குண்டலம் போட்டவா எல்லாரும் கோமா மாமி ஆகமுடியாது!”னு சொன்னதுக்கு சன்மானமா எனக்கு மாமி கையால கோகுலாஷ்டமி பக்ஷணமும், முதுகுல இரண்டு அடியும் கிட்டினது. அவாத்து மாமா அப்பிடியேதான் இருக்கார். அப்புறமா வாய்கால்ல வெச்சு ‘குசுகுசு’ குரல்ல “நமிதாவை பத்தி மாமிட்ட என்னவோ சொல்லிண்டு இருந்தியே?”னு ரொம்ப ஆர்வமா கேட்டார். “துபாய்ல தான் எங்க அக்காபொண் ஹரிணி இருக்கா, நீ அவாத்துக்கு போயிட்டு வாயேன்!”னு ஒரு மாமி நீட்டிமுழக்கினா. ‘துபாய்க்கு போகர்துக்கு விசா/பிசா எல்லாம் வாங்கனும் மாமி’னு சொன்னாலும் அவாளுக்கு புரியமாட்டேங்கர்து. “உங்க ஊருக்கு பக்கத்துலதான் துபாய்!னு சொன்னியே தக்குடு!”னு அவாத்து மாமா விடாம கேட்டார். “ஆமாம் மாமா அப்பிடிதான் சொன்னேன், ஆனா ரெண்டும் வேறவேற தேசம்!”னு சொல்லியும் சமாதானம் ஆகலை. ‘அவாத்துக்கு போ! இவாத்துக்கு போ!’னு வாய்கிழிய சொல்லுவாளே தவிர ஒருத்தராவது விலாசமோ போன் நம்பரோ தந்துடமாட்டா. ‘அக்காபொண்ணு ஹரிணி’னு கூகிள்ல அடிச்சுபாத்தா இவாளோட ஆத்து அட்ரஸை கண்டுபிடிக்கமுடியும்.

அடியேன் கல்லிடை போன சமயம் இங்க தோஹால இருக்கும் கருங்குளம் மாமா & குடும்பம் இந்தியா வந்திருந்தா. மாமி ஊர்ல இல்லாத சமயத்துல மாமா பில்டர் அடிச்சு ஒரு காப்பி போடுவார் பாருங்கோ!! அதை அங்கவஸ்தரத்துல அலுங்காம வாங்கி உறியர்துக்குனு இங்க தோஹால ஒரு வெட்டிகூட்டமே இருக்கு. அவாத்து மாமிக்கு கல்லிடைங்கர்தால அவாளையும் “ஒரு நாளைக்கு கருங்குளத்துலேந்து கல்லிடை வாங்கோளேன்!”னு அழைச்சுருந்தேன். கோவில்/பூஜைனு எது சொன்னாலும் “ஓ வரோமே!”னு ஒன்னுபோல சொல்லும் லட்சிய தம்பதிகள். அவாத்து மாமா நடக்கர்தே ஓடரமாதிரி தான் இருக்கும், காந்தியடிகளோட தண்டியாத்திரைக்கு பின்னாடி ஓடினவா மாதிரி மாமி ஓட்டமும் நடையுமா மாமா பின்னாடி வந்தா. கல்லிடைல முக்குக்கு முக்கு மாமியை நிப்பாட்டி எல்லாரும் பழைய கதையெல்லாம் பேச ஆரம்பிச்சதுல சாயங்காலம் 5 மணிக்கு வந்த மாமாவோட கார் கல்லிடைலேந்து திரும்பி போகும் போது ராத்ரி மணி 10.

போன தடவை அடியேன் யானைல கும்பம் கொண்டு வந்தபோதே ஒரு அம்பிக்கு அவன் ஏறமுடியலையே!!னு ரொம்ப குறை. அதனால இந்தவாட்டி அவனை யானை மேல ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கர்து!னு முடிவு பண்ணி கழுத்துல மாலையை போட்டு ஏற சொல்லிட்டோம். யானையோட பக்கத்துல போய் பாத்தா, போன தடவை காலால ‘ஓம்’ போட்ட அதே யானை. அவனுக்கு யானை கிட்ட போனதும் பயத்துல கையும் காலும் நடுங்க ஆரம்பிச்சுடுத்து. யானையோட காலை கட்டிண்டே நிக்கரானே தவிர ஏறமாட்டேங்கரான். அப்புறம் முக்கிமுனகி மேல ஏறி பின்பக்கத்தை பார்த்து உக்காச்சுண்டுட்டான். “திரும்பி நேரா உக்காருடா அம்பி!”னு சொன்னா “இனிமே எல்லாம் என்னால திரும்ப முடியாது வேணும்னா யானையை திருப்புங்கோ!”னு சொல்றான். பயங்கர காமெடியா இருந்தது அந்த அம்பியோட. இனிமே ஜென்மத்துக்கும் யானை பக்கமே வரமாட்டான்.

பெரிய பெரிய ஹோமங்கள், பதினாலு விதமான புஷ்பங்கள், கரையை தொட்டுண்டு ஓடின தாமிரபரணி, தரையை மூடின பச்சை வயல்கள், பெரிய பெரிய கோலங்கள்,அம்மா கையால் சமைத்த பருப்புருண்டை குழம்பும் கொல்லைபுரத்து கீரை, கணக்குவழக்கில்லாமா நொசுக்கின எல்லா மாமியாத்து கொழுக்கட்டை & கோகுலாஷ்டமி பக்ஷணம், பழைய தோஸ்துகளோட திண்ணைல அரட்டை & ‘டோங்கா’ கிண்ணத்துல சாப்பிட்ட கோவில் பிரசாதம் எல்லாம் எண்ணத்துல நிறைஞ்சு வண்ணத்துபூச்சியாய் திரும்பி வந்தேன்.......... (சுபம்)

Thursday, September 15, 2011

ஹலோவ்வ்வ்வ்...........

Part 1

ஒரு வழியா பொட்டியெல்லாத்தையும் எடுத்துண்டு மீனம்பாக்கத்துலேந்து வெளில வந்தேன். அதிகாலைல முதல் ஆளா வாசல் பெருக்கி தெளிக்கும் எங்க தெரு 'கொட்டடாகுடையடா' மாமியாத்து வாசல் மாதிரி ஒரு மிதமான மழை பெஞ்சு எல்லா இடமும் வாசல் தெளிச்ச மாதிரி ஈரபதத்தோட இருந்ததால மெட்ராஸ்ல வந்து இறங்கினோனே எப்போதும் வரும் எரிச்சல் இந்த தடவை வரலை.

மரியாதை நிமித்தமான சிலபல சந்திப்புக்கள் சென்னைல இருந்ததால் சென்னை வந்து பெண்களூர் போகற மாதிரி ஆயிடுத்து. மெட்ராஸ்ல இருக்கர மனுஷாளை விட மூனு மடங்கு ஜாஸ்தியா செல் போன் இருக்கும் போலருக்கு! அட ராமச்சந்திரா!!! அதுல என்ன தான் பண்ணுவாளோ! பகவானுக்கு தான் வெளிச்சம்! “இந்தோ வந்துண்டே இருக்கேன்! ரயிலுக்குள்ள ஏறியாச்சு! சீட்ல உக்காந்தாச்சு! கொட்டாவி விட்டேன்! கொய்யாபழம் சாப்பிட்டேன்!” இந்த ரீதில எல்லா சமாசாரத்துக்கும் சம்சாரத்துக்கு ஒரு கால். “உன்னோட அதிகார மயி@ எல்லாம் உங்க அப்பன்கிட்ட வெச்சுக்கோ!!” “சேலத்துல சகளையோட மூத்த மவளுக்கு வர வெள்ளிக்கிழமை சடங்கு!”னு கிராமிய மணம் கமழும் சம்பாஷணைகள் ஒரு பக்கம். “நீ எப்போதுமே இப்படி தான், ‘உம்மா’ தா!னு கேட்டா தரவே மாட்டே!” “நான் இப்போ என்ன கலர் சட்டை போட்டுண்டு இருக்கேன் சொல்லு பாப்போம்!!”னு எவனோ ஒரு அம்பிகாபதி அமராவதிக்கு சேதி சொல்லிண்டு இருக்கான். “இனிஷியல் பூட்டிங்க்ல பிரச்சனை இருந்தாலும் இருக்காலாம் எதுக்கும் நீங்க ரீபூட் பண்ணி பாக்கலாமே! yeppp! தரமணி கிட்ட வந்திட்டேன்!”னு நெட்வொர்க் அட்மினோட கால் ஒரு பக்கம் ஓடிண்டு இருக்கு.

இது எதுவும் இல்லைனா காது செவிடானவா மாதிரி சதாசர்வ காலமும் ஒரு மானம் கெட்ட ஹெட்போனை மாட்டிண்டு பாட்டு கேட்கவேண்டியது! பாட்டு கேக்கர்து நல்ல விஷயம் தான், நான் இல்லைனு சொல்லலை, அதுக்காக காதை திறக்காம எப்பபாத்தாலும் இசை மழையா? பொறுக்க முடியாம என்னோட பக்கத்துல இருந்த ஒருத்தர்கிட்ட நிஜமான குழந்தை அழர்து, கிளி கொஞ்சர்து எல்லாம் நீங்க கேட்டு இருக்கேளா?னு பேச்சு குடுத்தேன். ஒரு பக்க ஹெட்போனை கழட்டிட்டு "அது அடுத்த டிராக்ல ரிக்கார்ட் பண்ணி வெச்சுருக்கேன், எப்பையாவது கேப்பேன்"னு பதில் சொல்லிட்டு 'படக்'னு செவிட்டு மிஷினை மாட்டிண்டுட்டார். யாராவது டாக்டருக்கு படிக்கறவா இருந்தேள்னா அவா எல்லாரும் எண்டு டாக்டருக்கு (ENT) படிங்கோ! நிச்சியமா இன்னும் 5 வருஷத்துல முக்கால்வாசி ஆட்கள் செவிடாதான் அலையப்போறா.

இவாளோட ரிங்டோன் எல்லாம் கேட்டா கொஞ்சம் சிரிப்பும் வரத்தான் செய்யர்து. " நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" அடிச்ச உடனே பல்லெல்லாம் வாயா ஒரு அண்ணா அவரோட டாவு கூட பேசரார். "சட்டி சுட்டதடா கை விட்டதடா!" பாட்டு வந்து கரெக்டா ‘புத்தி கெட்டதடா’ னு டி.எம்.எஸ் இழுக்கும் போது போனை எடுத்து “வீட்டுக்கு தான் வந்துண்டு இருக்கேன்மா, வரும்போது அரை கிலோ புளி வாங்கிண்டு வரனுமா? வேற எதுவும் வேண்டாம்லா?னு பேசிட்டு விரக்தியா போனை கட்பண்ணர்து கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆன யாரோ ஒரு அப்பாவி ரங்கமணி. சரவணா ஸ்டோர்ஸையே வாங்கி வீட்டுல வெச்சாலும் இந்த பொம்ணாட்டிகளுக்கு ஆத்துக்கார் ஆபிஸ்லேந்து வரும் போது போன் பண்ணி “பால் வாங்கிண்டு வாங்கோ! குக்கருக்கு காஸ்கெட் வாங்கிண்டு வாங்கோ! பூ வாங்கிண்டு வாங்கோ! புண்ணாக்கு வாங்கிண்டு வாங்கோ!!”னு பிச்சுபிடிங்கி எடுக்கர்துல ஒரு தனி சுகம்.



தா! தை! திக்கி! தை! :)

ரொம்ப நாளாவே இந்தியாவுக்கு எப்ப வருவை? எப்ப வருவை? ஒரு அக்கா கேட்டுண்டு இருந்தா. பரத நாட்டியத்துக்கு பேர் போன ஒரு இடத்துக்கு பக்கத்துல இருக்கும் அந்த அக்காவோட ஸ்பெஷாலிட்டியே அவா சொல்லும் “ஹலோவ்!”தான். நான் தங்கி இருந்த இடத்துலேந்து 15 நிமிஷம் தான் அவாளோட வீடு, அதானால அவாத்துக்கு கிளம்பி போய், அவாத்து பக்கத்து பஸ் ஸ்டாண்ட்லேந்து கால் பண்ணினேன். 3 நிமிஷத்துல வந்து ஸ்கூட்டில என்னை ஏத்திண்டா. வண்டி கிளம்பினது மட்டும் தான் எனக்கு தெரியும். அம்ம்ம்ம்ம்மாடி! ஜாக்கிசான் வேகத்துல வண்டி ஓட்டறா. நடுல நடுல ‘தக்குடு இருக்கையா! தக்குடு இருக்கையா!’னு செக் பண்ணிண்டா. எல்லாம் முடிஞ்சு அவாளோட அப்பார்ட்மெண்ட் பார்கிங்ல சுவருக்கும் ஒரு தூணுக்கும் நடுல ஜேம்ஸ்பாண்ட் சண்டைகாட்சில வரமாதிரி புகுந்து ஒரு ப்ரேக் பிடிச்சா பாருங்கோ!! 1983-ல காலமான எங்க தாத்தா கண்ணுல தெரிஞ்சார்.

எதிர்காத்துல வந்ததால என்னோட ரெண்டு கண்ணுலையும் ஜலம். "ஆத்துக்கு வந்த மனுஷாளை பஸ்ஸ்டாண்ட்லேந்து பிக்கப் பண்ணினதுகெல்லாம் கண் கலங்க கூடாது கோந்தை"னு சொல்லிண்டே அவாத்துக்கு கூட்டிண்டு போய் லெமன் ஜூஸும் சிந்தூர நிறத்துக்கு சுடச்சுட கேசரியும் தந்தா. கேசரி ‘சூப்பரா இருக்கு!’னு சொன்னதுக்கு அப்புறம் மெதுவா “நான் தான் பண்ணினேன்!”னு சொன்னா எனக்கென்னவோ அவாளோட மாமியார் தான் பண்ணியிருப்பாளோ!னு ஒரு சம்சியம். ரொம்ப நேரம் அவாத்து மனுஷாளோட பேசிண்டு இருந்தோம். பிஸ்கெட் எனக்கு அவ்வளவா பிடிக்காதுங்கர்தாலா பேருக்கு அஞ்சே அஞ்சு ‘குட்டே’ பிஸ்கட் மட்டும் நொசிக்கினேன். அவாத்துல இருக்கும் போதே நம்ப பாங்க்’ மாமிக்கும் போன்ல பேசினோம். ‘ஆத்துக்கு வா தக்குடு!’னு ரொம்ப வாஞ்சையோட கூப்பிட்டா. “நான் ஸ்கூட்டில கூட்டிண்டு வரேன் மாமி!”னு இந்த அக்கா போன்ல சொன்னதுக்கு அப்புறம் பாங்க் மாமியாத்து விசிட்டையே நான் மறந்துட்டேன். திரும்பி ஆத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடி அவாத்து பூஜைரூம்ல உள்ள உம்மாச்சிக்கு "பத்திரமா கை/காலோட என்னை திருப்பி அனுப்பி வை பெருமாளே"னு வேண்டிண்டு சேவிச்சேன். சேவிச்சு எழர்துக்குள்ள “அத்திம்பேர் அடுத்த வருஷம் ‘ஆல்டோ’ கார் வாங்கி தரர்தா சொல்லி இருக்கார் தக்குடு!”னு குண்டை தூக்கி போட்டா நம்ப அக்கா.

அடுத்த நாள் காத்தால நான் பெண்களூர் கிளம்பி போயாச்சு. பங்காரபேட்டை ஸ்டேஷன் தாண்டும் போதே மனசுக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோஷம்! இருக்காதா பின்ன? தக்குடு இந்த லோகத்தை தெரிஞ்சுண்ட புண்ணிய ஷேத்ரமாச்சே! பெண்களூர்ல ஏகப்பட்ட மாற்றங்கள். அவுட்டர் ரிங்க் ரோட்ல எல்லாம் திடீர் திடீர்னு மேம்பாலம் வருது. மெட்ரோ ரயில் வேலை மும்மரமா நடக்கர்து, வால்வோ ஏசி பஸ்ல வண்டி வண்டியா கூட்டம் ஏறர்து, எல்லாரோட கைலயும் ஆப்பிள் ஐபோன் இருக்கு. ஹோட்டல்ல எல்லாம் விலைவாசி தங்கம் மாதிரி ஏறி இருக்கு. ஒரு மசால் தோசை + ஒரு ஜோடி சாம்பார் வடை + ஒரு காபி சாப்பிட்டதுக்கு 110 ரூபாய் பில்லு, பில்லை பாத்துட்டு ஆத்த்த்த்தாடி!னு வாய்விட்டே சொல்லிட்டேன். “ஆத்தாடியாவது! காத்தாடியாவது! ஒழுங்கா பைசாவை எடு!”னு சொல்லர மாதிரி சர்வர் முறைச்சார். வேலை பாத்த பழைய கம்பெனிக்கு போய் சகாக்களை எல்லாம் பாத்தேன். அந்த ‘டெக் பார்க்’ல அடா அடா அடா! என்ன ஒரு சூழ்நிலை தெரியுமோ! கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கலர் கலரா ரகம்ரகமா..... பூ செடி இருந்ததுனு சொல்லவந்தேன். ஆபிஸ்ல இருந்த கன்னடத்து பைங்கிளிகளோட ரொம்ப நாளைக்கு அப்புறம் சத்தமா கன்னடத்துல பேசி சிரிச்சோம்.

பெண்களூர் போயிட்டு அங்க உள்ள மால் எதையும் பாக்காம வந்தா ஊருக்கு போன பலன் கிட்டாது!னு ஊர் பெரியவால்லாம் சொல்லி இருக்கர்தால பழைய ப்ரண்டை கூட்டிண்டு ஃபோரம் மால் போனேன். போகும் வழில மாரத்தஹல்லில ஒரு பாணிபூரிகாரர் “வட்டத்துல ஒரு கை குறையர்து”னு சொன்னதால நானும் சேர்ந்துண்டேன்.. மாலுக்கு போனதுக்கு அப்புறம் நானும் எங்க அண்ணாவும் ஜோடியா உக்காசுண்டு உலகத்தோட மாயாவினோதங்களை அலசி ஆராய்ஞ்ச மாடிப்படில போய் திரும்பி ஒரு தடவை உக்காசுண்டு பாத்தேன். அங்க உள்ள செண்ட்/பவுடர்/சாம்பூ மணம் மாறாம இருந்தாலும் பிகர்கள் எல்லாம் நல்ல முன்னேறி இருக்கா. அவா போட்டுண்டு வளையவந்த டிரெஸ் நார்மல் சைஸ்னு கணக்குல எடுத்துண்டா எங்க ஊர்ல இருக்கும் குழந்தேளுக்கான 'மம்மிடாடி' ரெடிமேட் ஷோரூம்ல இருக்கும் மூனு வயசு குழந்தையோட கவுன் சைஸ் XL-நு தான் சொல்லனும். நிறையா பிகர்கள் அவாளோட 10ஆவது பிறந்த நாளுக்கு அவாத்துல எடுத்துகுடுத்த டிரஸ்ஸை எல்லாம் 20 வயசுல போட்டுண்டு கிழக்கையும் மேற்கையும் போயிண்டு இருந்தா. இன்னொரு அவதாரம் போட்டுண்டதுக்கு அப்புறம் தைச்ச மாதிரி இருந்த ஒரு டவுசரை போட்டுண்டு லாந்தினது. என்னோட ப்ரண்டோட ரொம்ப மும்மரமா பேசிண்டு இருந்ததால இந்த விஷயம் எதையுமே நான் கவனிக்கலைனு உண்மையை சொன்னா நீங்க எல்லாரும் “நம்பிட்டோம்!”னு தான் கமண்ட் போடுவேள்.

திடீர்னு மெட்ராஸ் அக்காடேந்து ஒரு கால், "ஹலோவ் தக்குடு, ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்டா கோந்தை! அங்க வந்த பொம்ணாட்டிகள் எல்லாம் டிசைன் டிசைனா ஜன்னல் வச்ச @#$% போட்டுண்டு வந்தா, உன்னை தான் நினைச்சுண்டேன்!”னு வம்புக்கு இழுத்தா. ‘இதுக்கு எதுக்கு என்னை நினைச்சுக்கனும்!’னு மனசுல யோசிச்சுண்டே “அக்கா, கவலையேபடாதீங்கோ! மெட்ராஸ்ல ஜன்னலை மூடின பகவான் பெண்களூர்ல கதவையே திறந்துட்டார்!”னு சொல்லி சமாதாபடுத்தினேன்..........:)

குறிப்பு - போன போஸ்ட்லையே எல்லாரும் பல்லாவரம் பல்லாவரம்!னு சொல்லிண்டு இருந்தா, அது தமிழ் நாட்ல இருக்கா இல்லைனா கேரளால இருக்கனு கூட எனக்கு தெரியாது! அடுத்த போஸ்ட் சிருங்கேரி & கல்லிடை மாமா/மாமிகளுடன் கொண்டாடிய சதுர்த்தி உத்ஸவ ஸ்பெஷல் ரிப்போர்ட்........

Thursday, September 8, 2011

அதாகப்பட்டது................

பாலக்காடு தொடங்கி பனாமா கால்யாய் பர்யந்தம் ஜீவிச்சு இருக்கும் எல்லா ஓமணக்குட்டிகளுக்கும்/சேட்டன்களுக்கும் மனசு நிறைஞ்ச ஓணம் ஸத்யா


Itடது Butடானால் Whatடென்ன Sirஐயா-னு பெரியவா எல்லாம் சொன்ன மாதிரி ஊருக்கு போனாதான் நாலு வார்தை நம்பளால எழுத முடியர்து. மத்தவா எல்லாம் புத்தக விமர்சனம், உண்மையின் நிதர்சனம், ஏழையின் கரிசனம், ஆலய தரிசனம்னு நன்னா கோர்வையா எழுதிட்டு போயிடரா, இலை போடாத பந்தில உக்காந்த மாமி எதிர்த்த பந்தில பால்பாயாசத்தை நக்கி ஏப்பம் விடர மாமியை ஏக்கமா பாக்கர மாதிரி எல்லாரோட போஸ்டையும் பாத்துண்டு இருந்தேன். “எலேய் தக்குடு! ஒட்டகம் மேய்ச்சதெல்லாம் போதும் கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தொப்பையப்பனுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வா!”னு ஷேக்கு சொல்லிட்டார். பக்கதாத்து பொண்ணுக்கும் சேர்த்து பிள்ளையார் கோவில் சுவத்துல உக்காச்சுக்க இடம் போட்ட மாதிரி 2 மாசம் முன்னாடியே துண்டை போட்டு பிளைட்ல ஜென்னலோரமா ஒரு டிக்கெட் போட்டு வைச்சது கொஞ்சம் செளகர்யமா தான் இருந்தது. ஏர்போர்ட்ல 8 சாஸ்தா ப்ரீதிக்கு சேர்ந்த கூட்டம் மாதிரி ஜனபிரவாஹம்.

இந்த தடவை ஏர்போர்ட்ல ஆரம்பிச்சு காஸ்மோபொலிடன் வரைக்கும் எங்கையும் வம்பை விலைக்கு வாங்கப்பிடாதுனு ஒரு சங்கல்பத்தோட தான் கிளம்பினேன். 4 சீட்டுக்கு நடுல உக்காசுண்டாதான் வம்பு வருதுனு ஒரு அனாலிஸிஸ் பண்ணி இந்த தடவை டபுள் சீட்டர்ல டிக்கெட் போட்டு வெச்சுருந்தேன். சீட்டை தேடி கண்டுபிடிக்கர்த்துக்குள்ள இந்த ஏரோப்ளேன் பொம்ணாட்டிகள் 3 தடவை இடிச்சுட்டு போயாச்சு. இப்பெல்லாம் பொம்ணாட்டிகள் தான் ஆம்பிளேளை இடிக்கரா, ஹும்ம்! எல்லாம் கலி காலம். அடுத்த இடி அவா இடிக்கர்த்துக்குள்ள சீட்டை கண்டுபிடிச்சு போய் உக்காச்சுண்டுட்டேன்.





பயணங்கள்.....


பக்கத்து சீட்டுகாரன்/காரி நல்லபடியா அமையனுமேனு கொஞ்சம் கவலையாதான் இருந்தது. நம்பளை மாதிரியே அமைதியான(?!) சுபாவமா இருந்தா பிரச்சனை இல்லை. சிலபேருக்கு நாலு சீட் தள்ளி அவாளோட சகா யாராவது இருப்பா, அவாளை கூப்பிடறேன் பேர்வழினு நம்ப காதுல வந்து கத்திண்டு இருப்பா. இப்படியெல்லாம் யோசிச்சுண்டு இருக்கும் போதே ஜிப்பா போட்ட ஒரு வெள்ளக்கார மாமி சொல்லி வெச்ச மாதிரி சப்பரமா வந்து பக்கத்துல உக்காந்தா. திருனவேலி பஸ்ஸா இருந்தா “பொம்பளையாள் வந்துருக்கு பக்கத்து சீட்ல மாறி உக்காருங்க அண்ணாச்சி!”னு சொல்லி சீட்டு கொள்ளாம உக்காசுண்டு இருக்கும் ஒரு கிடாமீசை அண்ணாச்சிக்கு பக்கத்துல நம்மை கண்டக்டர் மாத்தி விட்டுடுவார்.


ஒரு ஹாஆஆய்! சொல்லிட்டு அவாளோட இடத்துல செட்டில் ஆயிண்டா அந்த வெள்ளக்கார மாமி. ப்ளைட்ல ஏறின உடனே எந்த படமும் பாக்க ஆரம்பிக்க கூடாது. ப்ளைட் கிளம்பர வரைக்கும் நடுல நடுல நம்ப ஹெட்போன்ல கேப்டன் மாமா “ப்ளைட் நகர்ந்துண்டுருக்கு! பறக்க போகர்து! சீட்டை கெட்டியா புடிச்சுக்கோங்கோ! பக்கத்துல பிகர் இருந்தா அதோட கையை புடுச்சுக்கோங்கோ! பறக்க தொடங்கியாச்சு! டயர் உள்ள போகர்து! கக்கூசுக்கு போனவா மறக்காம ஜலம் விடுங்கோ!”னு எதாவது அனோன்ஸ்மென்ட் பண்ணி பண்ணி ப்ராணனை வாங்குவார். அதனால ப்ளைட் கிளம்பர வரைக்கும் நாம எதாவது புஸ்தகம் படிக்கர்துதான் தேவலை. நான் கைல கொண்டு போன புஸ்தகத்தை வாசிக்க ஆரம்பிசேன். அந்த வெ.மாமியும் புஸ்தகம் வாசிக்க ஆரம்பிச்சா.


கொஞ்ச நேரம் கழிச்சு பிரட்ல பட்டர் தடவும் போதுதான் நமக்கும் அந்த வெ.மாமிக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்னு தெரிஞ்சது. அவாளோட கைல ஹாரி பாட்டர், என்னோட கைல அபிராமி பட்டர். அழகா வெஜிடேரியன் சாப்பாடு சொல்லி வச்சு வாங்கி சாப்பிட்டா என்னோட சாம்பார் அவ்ளோ சோபிதம் இல்லாததால அந்த அம்மா அவாளுக்கு சொல்லி வெச்சுருந்த பெரும்பயறு டால்ல ஒரு கரண்டி எனக்கும் விடச்சொன்னா. இந்தியா பத்தி அவ்ளோ சமாசாரம் அவாளுக்கு தெரிஞ்சுருக்கு. அவாளோட குடும்ப கதையெல்லாத்தையும் என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டா. அந்த அம்மாவோட ரெண்டு புள்ளையாண்டான்கள் அமெரிக்காலையும் ஐரோப்பாலையும் இருக்கா. வெ.மாமி மெட்ராஸ்ல வேலை பாக்கராளாம். அவாளோட ஆத்துக்காரர் உன்னிகிருஷ்ணன்னு ஒரு மலையாளி. “அப்போ ஃபாரின் க்ளோப்ரேஷன்னு சொல்லுங்கோ!”னு பழக்க தோஷத்துல ‘படக்’னு சொல்லிட்டேன். நல்லவேளை அவா தப்பா எடுத்துக்காம ரசிச்சு சிரிச்சா. திருவண்ணாமலை, ரமணாஸ்ரமம் பத்தி எல்லாம் பேசினா. “ஊர்ல இருக்கர பண்டாரம்/பரதேசி,ஞானப்பழம்/வாழைப்பழம் எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி உன்கிட்ட வந்து சவகாசம் வெச்சுக்கறாளே அது எப்பிடிடா மாப்ளே?”னு எங்க அண்ணா என்னை எப்போதும் கேட்பது ஞாபகம் வந்தது. “நீ என்ன புஸ்தகம் வாசிக்கறாய்?”னு கேட்டா. “இவரும் அல்மோஸ்ட் ஒரு இந்தியன் ஹாரிபாட்டர் தான் ஆனா இவரோட பேர் அபிராமி பட்டர். 100 பாட்டு பாடி அக்னிலேந்து தப்பிச்ச 'தி கிரேட் எஸ்கேப் ஸ்டோரி”னு அவாளுக்கு புரியரமாதிரி சொன்னேன்.


'திருவண்ணாமலைல பெளர்ணமி அன்னிக்கு வரக்கூடிய லக்ஷக்கணக்கானவா ஏன் கிரிவலபாதை முழுசும் எதையாவது சாப்டுண்டே போறா? போன்ல வேற பேசிண்டே இருக்காளே?'னு ஏகப்பட்ட சந்தேகம் வெ.மாமி கேட்டா. வாஸ்தவமான கேள்விதான். எனக்குமே முக்தி தலத்துல போய் “பொண்டாட்டியை குடு! புள்ளை குட்டியை குடு! மூட்டை மூட்டையா ஐஸ்வர்யத்தை குடு!”னு வேண்ட்ரவாளை பாத்தா பரிதாபமா இருக்கும். அதுலையும் திருவண்ணாமலைல குபேர லிங்கம் சன்னதில கூட்டம் அலைமோதும், வாயு லிங்கம்,யமலிங்கம் எல்லாம் காத்தாடும். “திருவண்ணாமலைல ரமணாஸ்ரமம் தவிர வேற எங்கையும் போயிடாதீங்கோ மாமி! குண்டலினி/ஜிமிக்கினு கலர் கலரா ரீல்விடும் தலப்பா கட்டின ஃப்ராடு பயலுக ஜாஸ்தி!”னு வெ.மாமியை உஷார் படுத்தினேன். ஒரு டகால்டி ஸ்வாமிகள் கிட்ட போய் ஒருத்தன் "ஸ்வாமி! அடியேனுக்கு எப்போது ஸித்தி கிட்டும்?"னு கேட்டானாம். என்ன சொல்லர்துன்னு தெரியாம 2 நிமிஷம் கண்ணை மூடி இருந்துட்டு "உங்க அப்பா எவ்வளவு சீக்கரம் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கறாரோ அந்த க்ஷணமே உனக்கு சித்தி கிட்டும்"னு ஸ்வாமிகள் சொன்ன கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.


பேச்சுக்கு நடுல வெ.மாமி கல்யாணம் ஆகி 16 வருஷத்துக்கு அப்புறம் டைவர்ஸ் ஆயிடுத்து!னு சாதாரணமா சொன்னா. ‘நீங்க பண்ணினேளா? அவர் பண்ணினாரா?’னு எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமியா இருந்தா கேட்டு இருப்பா. நான் அதெல்லாம் கேட்கலை.”பொதுவா வெள்ளக்காரா ஆத்து கதவு நம்பரை கேட்டாளே ‘மைண்ட் யுவர் சொந்த பிசினஸ்’னு சொல்லிடுவாளே, நீங்க உங்காத்து மாமா சமாசாரம் எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றேள்?”னு கேட்டதுக்கு “நீ என்னோட ரெண்டாவது புள்ளையாண்டான் மாதிரியே இருக்கைடா கோந்தை!”னு சொல்லிட்டா. மனசுக்குள்ள தலைவரோட ‘அம்மா என்றழைக்காத’ பாட்டை ஓட விட்டு முகத்துல ‘ஆஆஆஆ!’னு கமல் பீலிங் குடுக்க நான் ப்ரயத்தனம் பண்ணர்துக்குள்ள “அவனும் உன்னை மாதிரியே சம்பந்தா சம்பந்தம் இல்லாம தத்துபித்துனு உளறிண்டே இருப்பான்”னு சொல்லி கடைசில என்னை வடிவேலாட்டம் ‘அவ்வ்வ்வ்வ்!’னு சொல்ல வெச்சுட்டா அந்த வெ.மாமி.


அதாகப்பட்டது, நாம என்ன தான் அமைதியா இருக்கனும்னு முயற்சி பண்ணி வாயை கட்டி வெச்சுருந்தாலும் வலியவந்து நம்ப கிட்ட பொலம்பக்கூடியவா பொலம்பத்தான் செய்வா. கடைசில நாம தான் இஷ்டப்பட்டு பேசின மாதிரி அக்ஷதையை நம்ப தலைல போட்டுடுவா. ஜாதக ராசியை திடீர்னு எல்லாம் மாத்த முடியாது. இமிக்ரேஷன்ல சீல் வாங்கர்துக்கு மெட்ராஸ் ஏர்போர்ட்ல நிக்கும் போது பின்னாடிலேந்து யாரொ பிராண்டரமாதிரி ஒரு பீலிங். திரும்பினா குட்டியூண்டு கருப்புகலர் ஸ்டிக்கர் பொட்டு வெச்ச ஒரு அக்கா " நீங்க என்னோட சித்தி புள்ளை சைச்சு மாதிரியே இருக்கேள்"னு ஆரம்பிச்சா (“அய்யைய்ய்ய்ய்யோ! மறுபடியும் முதல்லேந்தா?”னு மனசுக்குள்ளே கேட்டுண்டேன்)........................................


குறிப்பு – (It = அது, but = ஆனால், what = என்ன, sir = ஐயா ) அடுத்த போஸ்ட் சென்னை, பெண்களூர் & கல்லிடை காஸ்மோல சந்தித்த சில சுவாரசியமான விஷயங்கள் :))