Thursday, April 28, 2011

சாஸ்தா ப்ரீதி (Part 2)

மூச்சா மாமாவாத்துல எல்லாம் காத்தால ஆஹாரம் கிடையாது, முக்கால்வாசி ஆத்துல கொலைபட்டினி இருந்துண்டு 10 மணி இல்லைனா 11 மணிக்கு நேரடியா சாப்பிடுவா. அவாளுக்கு எல்லாம் சாஸ்தா ப்ரீதில பூஜை முடிஞ்சு சாப்பாடு எப்படா போடப்போரா?னு ஆயிடும். நல்ல பசில இருந்த மூச்சா மாமா மெதுவா எங்க தெரு தக்கார் மாமா கிட்ட, " நம்ப தெரு கிழி வரும் போது 9 மணிக்கு கொஞ்சமா ஒரு ரவாபாத் சட்னி சகிதமா ஒரு ஆஹாரம் போட்டா என்ன?"னு ஒரு பிட்டை போட்டார். அதுக்கு தக்கார் மாமா "ஆமாம் ஓய்,ரவாபாத், கேசரி,போண்டா எல்லாம் போட்ருவோம். குடிக்கர்துக்கு காபி போதுமா இல்லைனா பாதாம்கீர் போடலாமா ஓய்?"னு நக்கல் அடிக்கவும் மூச்சா மாமா வாயையே திறக்கலை.

காத்தால ருத்ர ஜபம் முடிஞ்சு சாஸ்தா பீடத்துக்கு அபிஷேகம் ஆனதுக்கு அப்புறம் வெளி பிராகாரத்துல ஒரு மேடைல அலங்காரம் பண்ணி வச்சுருக்கும் 3 பெரிய விளக்குலதான் எல்லா பூஜையும் நடக்கும். குளத்து தீக்ஷதர் மாமா பெரிரிரிய கைமணியை 'டிங் டிங் டிங்'னு மெதுவா அடிச்சுண்டு பூஜை பண்ணும் அழகே அழகுதான். வழிவழியா வந்த பரம்பரையை சேர்ந்த வயசான மாமாக்கள் சாஸ்தாவோட பிரதி நிதியா பலகாய்ல கம்பீரமா உக்காசுண்டு இருப்பா. 12 மணிக்கு அப்புறம் பலகாய் ஸ்தானத்துகாரா எல்லாரையும் குடை/மேள தாளத்தோட பக்கத்துல இருக்கும் வாய்க்காலுக்கு நீராட்டர்துக்கு அழைச்சுண்டு போவா. ஆராட்டு நடக்கும் போது பசங்க வால்தனத்தை ஆரம்பிச்சுடுவா. பொதுவா பலகாய் ஸ்தானத்துகாரா மட்டும் ஸ்னானம் பண்ணிட்டு புது வஸ்த்ரம் கட்டிக்கர்து வழக்கம். அவா கூட போன சில அச்சுபிச்சு ஆட்களையும் சேர்த்து பசங்க குளுப்பாட்டி அனுப்பிடுவா. திடுதிப்புனு குளிச்ச அவாளுக்கு கட்டிக்க மாத்து வேஷ்டி கூட இல்லாம முழிச்சுண்டு இருப்பா. என்னவோ அந்த மாமாக்கள் ஆசைபட்டு ஸ்னானம் பண்ணின மாதிரி அவாத்து மாமிகள் " ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்ங்கர கதையா நீங்க எதுக்கு ஸ்னானம் பண்ணினேள்? கஷ்டகாலம்"னு கரிச்சுகொட்டுவா.



சாஸ்தா வரவு..:)

அது முடிஞ்சு சாஸ்தா வரவு பாட்டு எல்லாம் பாடிண்டே அவா எல்லாரையும் மறுபடி கோவிலுக்கு அழைச்சுண்டு வருவா. பலகாய் ஸ்தானத்துகாராளுக்கு குடுக்கர்துக்குனு தனியா இளனீர்,பானகம் எல்லாம் உண்டு. சில மாமாக்கள் இளனீருக்கு ஆசைபட்டுண்டு அவாளும் ‘திங் திங்’னு சாமி வந்த மாதிரி குதிச்சு எல்லாம் பார்ப்பா, அவாளுக்கு எல்லாம் குடுக்கர்த்துக்கு தனியா இளனீர் ஓட்டுல வாய்கால் ஜலம் ரொப்பி ஸ்பெஷல் இளனீர் தயார் பண்ணி வெச்சு இருப்போம். அதை குடிச்சவா அடுத்த 10 நிமிஷத்துல முடுக்கை பாத்து முடுக்கிண்டு ஓடுவா.

5000 பேர் சாப்பிடும் பந்தில நம்ப இஷ்டத்துக்கு எல்லாம் வாளியை எடுத்துண்டு பரிமாறமுடியாது. அதுக்கும் ஒரு முறை உண்டு. பாயாசம்/ஸ்வீட்/வடை பரிமாறும் பொறுப்பு எப்போதும் கிழி கிராமத்துக்கு மத்த அயிட்டம் எல்லாம் குலுக்கல் முறைல சீட்டு எழுதி போட்டு தீர்மானம் பண்ணுவா. சில கிராமத்துக்காரா எல்லாம் பெரிய அயிட்டம் எதுவும் வந்துடகூடாதே!னு உம்மாச்சியை பிரார்த்தனை பண்ணிண்டு இருப்பா. பரிமாறும் வேலை நடக்கும் போது கிராம தர்மாதிகாரி எல்லாம் சரியா நடக்கர்தா?னு கழுகு மாதிரி பாத்துண்டே இருப்பா. சரியான முறைல பரிமாறாட்டியோ அல்லது பரிமாறும் போது சிடுசிடுனு எரிஞ்சு விழுந்தாளோ அந்த கிராமத்து தக்கார் ராத்ரி நடக்கும் மீட்டீங்க்ல விளக்குக்கு நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேக்கனும். மெட்ராஸ்லேந்து வந்த யாரோ ஒரு மாமா ஒரு ஆர்வகோளாறுல வாளியை எடுத்துண்டு பரிமாற போயிட்டார். சர்வ நிதானமா அவர் பரிமாறின அழகை பாத்துட்டு எங்க தெரு கிச்சா மாமா " ஏ அம்பி! நீ இப்படி மோஹினி அவதாரம் அமிர்தம் பங்கு போடர மாதிரி டான்ஸ் ஆடிண்டு பரிமாறினாக்கா ராத்ரி நான் 500 நமஸ்காரம் பண்ணனும்டா!"னு சொல்லி வேற ஆளை பரிமாறசொன்னார்.

குட்டி குட்டி வானரங்கள் கைல ஜக்கை வெச்சுண்டு எல்லாருக்கும் ஜலம் கேட்டுண்டு வரும். சரிய்யா கங்கா மாமி பக்கத்துல போகும் போது ஏ கங்கை! ஏ கங்கை!னு ஜலம் கேக்க ஆரம்பிச்சிருவோம். வயசுல பெரியவாளை பேர் சொல்லி கூப்டா வாய்ல புண்தான்டா வரும் உங்களுக்கு!னு அந்த மாமியை கொஞ்சம் கத்த விட்டுட்டு அடுத்த வரிசைல காவேரி மாமியை பாத்த உடனே பொங்கி வரும் காவேரி! பொங்கி வரும் காவேரி!னு கூவ ஆரம்பிச்சுடுவோம்...:)



பச்சை பட்டுபுடவையில் கல்லிடை...:)

பந்தில இடம் பிடிக்கர்துக்கு மாமா மாமிகள் ஜாக்கிஜான் வேகத்துல ஓடுவா. இப்படிதான் ஒரு தடவை குண்டல கோமா மாமி பக்கத்துல ஒரு இடம் போட்டு வெச்சுருந்தா, அந்த பக்கமா வந்த இன்னோரு மாமா,

i) “யாருக்கு இடம் மாமி?”

"எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமிக்கு இடம் போட்டு் வச்சுருக்கேன் மாமா"

"ஓஓஓ! வைதேகி மாமி போன பந்திலையே சாப்டுட்டு கைஅலம்ப போயாச்சு, நான் உக்காந்துக்கறேன்.

ஓய்ய் மாமா! பொம்ணாட்டிகள் பக்கத்துல வந்து உக்கார வரேரே ஓய்! வேற எங்கையாவது போங்கோ மாமா!

உங்காத்து மாமாவும் நானும் கோத்ர தாயதிதான் மாமி அந்த வகைல பாத்தாக்கா நீங்க எனக்கு அங்கச்சி தான். பேசாம சாப்பிடுங்கோ மாமி!

.................................................................................

ii) “ஏ கோமா எப்பிடிடீ இருக்கை? உன்னோட ஆம்படையான் இப்ப நேரும்கூருமா இருக்கானாடீ? எங்கடீ உன்னோட ஆத்துக்காரன்?”

அதோ! பாயாச வாளியை தூக்கிண்டு ஓடிண்டு இருக்காரே?

இங்க எல்லாருமே பாயாச வாளியோடதான் ஓடிண்டு இருக்கா இதுல எந்த பாயாசவாளியை போய் பாக்கர்து!!

கட்டம் போட்ட அன்ட்ராயர் கூட வெளில தெரியர்தே! அவர்தான் மாமி!”

....................................................................................

iii) ஏ அம்பி! அவியல் போடுறா! கூப்ட கூப்ட காதுல வாங்காத மாதிரியே போறையேடா?

கொஞ்சம் தள்ளி போனதுக்கு அப்புறம் “இதோட 8 தடவை அவியல் போட்டாச்சு! என்னதான் வயிரோ! பாயாசத்துக்கு எல்லாம் அவியலை தொட்டுண்டு சாப்பிடரார் அந்த மாமா, கஷ்ஷ்ஷ்டம்!”

இந்த மாதிரியான சம்பாஷனைகள் எல்லாம் சர்வசாதாரணமா கேக்கலாம்.



சுபம்

Thursday, April 21, 2011

சாஸ்தா ப்ரீதி

ஐயப்பன் உம்மாச்சிக்கு நடக்கும் வெகு விமர்சையான ஒரு பூஜை இந்த சாஸ்தா ப்ரீதி. பூஜை சம்பந்தமான விஷயம் எல்லாம் உம்மாச்சி ப்ளாக்ல நாம தனியா பாக்கலாம். இந்த பதிவுல நாம பார்கப்போவது அந்த விழால நடக்கும் கலாட்டாக்கள்.

குத்துக்கல் தெருல ஒரு புள்ளையாண்டானுக்கு சாஸ்தா ப்ரீதினு சொல்ல வராது சாஸ்தா வரைக்கும் ஒழுங்கா சொல்லுவான் அதுக்கப்புறம் ப்ரீதியை ப்ரீத்தி ஆக்கிடுவான். “ப்ரித்தியும் இல்லை! சுவீட்டியும் இல்லை! நீ ஐயப்ப பூஜைனு சொன்னாபோரும்டாப்பா!”னு அந்த தெரு மாமா ‘சிடுசிடு’னு எரிஞ்சு விழுவார் (அந்த மாமாவோட சீமந்தபுத்திரியோட பேர் ப்ரீத்தி). கல்லிடை காஸ்மோபொலிடன் சிட்டில இருக்கும் எல்லா அக்ரஹாரங்களும் ஒத்துமையா கொண்டாடும் ஒரு விழான்னே இதை சொல்லலாம்.18 அக்ரஹாரம் சேர்ந்த தொகுப்புக்கு கரந்தையார்பாளையம் சமூகம்னு பேர். 18 அக்ரஹாரத்துக்கும் தனி தனியா தர்மாதிகாரியா அந்த தெருல இருக்கும் ஒரு மாமா இருப்பார்.சமூகத்தோட நிர்வாகம் சுழற்சி முறைல ஒவ்வொரு கிராமமா சுத்தி வரும்.சமூகத்துக்கு தனியா ஒரு பெரிய தொகை வங்கில உண்டு. அதுலேந்து வரும் வட்டியை வெச்சுண்டு ஒரு வருஷம் முழுசும் வரும் பொது விஷேஷங்களை கழிக்கனும்.அதுல முக்கியமான ஒரு விஷேஷம் இந்த சாஸ்தா ப்ரீதி. இந்த விஷேஷம் முடிஞ்சு தான் சமூகத்தோட பொறுப்பை அடுத்த கிராமத்துகாராளுக்கு மாத்தி குடுப்பா. பொதுவா வடக்கு தமிழ் நாடு முழுசும் ராம நவமி,கிருஷ்ணஜெயந்தி இந்த மாதிரி உத்ஸவம் தான் ஜாஸ்தி. தெற்கதான் அதுவும் நெல்லை மாவட்டத்தை சுத்தி உள்ள பிரதேசங்கள்ல தான் ஹரிஹரசுதனுக்கு வழிபாடுகள் ஜாஸ்தி (என்ன இருந்தாலும் மலையாளதேசம் பக்கமோ இல்லையோ!).

ஆடி மாச சனிக்கிழமைல இந்த விஷேஷமும் அதை தொடர்ந்து சுமாரா 5000 பேருக்கு போஜனமும் நடக்கும், அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை சூரிய நாராயண பூஜை & போஜனம். இந்த போஜன சாலைலதான் வேடிக்கை வினோதம் எல்லாம் அரங்கேரும். சமூகத்து பொறுப்பை சுருக்கமா கிழினு சொல்லுவா. 2 யானை பொம்மை, 2 கைவிளக்கு, பட்டுத்துணியில் சுத்தின பழைய ஏட்டிச்சுவடி - இதுதான் எங்களுக்கு தெரிஞ்ச கிழி. “கிழி இந்த கிராமத்துலேந்து அந்த கிராமத்துக்கு மாறர்து!”னு சொல்லிப்பா. சக்கப்பழம் ஹரீஷ், “கிளி நம்ம கிராமத்துக்கு எப்ப வரும்?”னு கேப்பான். ‘ஆகாஸத்தை பாத்துண்டே இருடா கோந்தை! கிளி காக்காய் எல்லாம் வரும்!”னு அகிலா மாமி நக்கல் அடிப்பா. சாஸ்தா ப்ரீதி முடிஞ்சு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கிழி வாங்கின கிராமத்துக்காரா கிழி சாமான் எல்லாத்தையும் மேளதாளத்தோட அவா தெருவுக்கு கொண்டு போவா. எங்க தெருல இந்த யானை பொம்மையை கைல கொண்டு வரர்துக்குனு ஸ்பெஷலா ஒரு மாமா இருக்கார்...:)



கிழி சாமான்

ஐயப்பனுக்கு பாயாசம் தான் மஹா நைவேத்யம் மேலும் எல்லாருக்கும் பந்திலையும் தாராளமா பாயாசம் பரிமாறனும், இந்த சிட்டில எல்லாம் பந்தில ஒரு மொட்டை கிண்ணத்துல வைக்கர மாதிரி இருந்தா மொத்தமே 2 வாளி பாயாசம் இருந்தா போதும், இங்க கதையே வேற. ஒரு வரிசைக்கு 'கிள்ளு' பாயாசம் பரிமாறவே பெரிய வாளியால ஒரு வாளி பாயாசம் வேணும். எங்க தெரு பீப்பி மாமா,சந்தனகும்பா மாமி எல்லாம் கோதால குதிச்சாக்க 3/4 வாளி பாயாசம் அவாளுக்கே காலி ஆயிடும்..;) சாஸ்தா ப்ரீதிக்கு பாயாசம் பண்ணர்த்துக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய வெண்கல உருளி உண்டு, சும்மா குத்துமதிப்பா எல்லாம் சாமான் போட முடியாது இத்தனை வாளி ஜலம்,இத்தனை வட்டு வெல்லம்&தேங்காய்,இத்தனை பக்கா அரிசி,முந்திரினு கணக்கு எல்லாம் உண்டு. அந்த விஷயம் எல்லாம் உருளியோட உள்பக்கம் செதுக்கி வச்சுருக்கா.



உருளி இவ்ளோ பெரிசு இருக்கும்....:)

கிழிக்கார கிராமத்தை சேர்ந்தவா தான் பாயாசத்துக்கு யத்தனம் பண்ணி குடுக்கனும். 7 மணி நேரம் ஆகும் பாயாசம் பண்ணி முடிக்கவே. அதனால எங்க தெரு கிழியின் போது காலங்காத்தால 2.45 மணிக்கு எழுந்து குளிச்சுட்டு மேற்கு கோடில இருக்கும் எங்க தெருக்காரா எல்லாரும் Bare body-யோட ஐயப்பனோட பேர் பாடிண்டே தெருலேந்து கிளம்பி கிழக்கு கோடில இருக்கும் கோவிலுக்கு ‘பளபளக்கும் விபூதி, பளிச்சிடும் கோபி’னு ரகம் ரகமா வானர சேனை கைவீச்சும் கால்வீச்சுமா போவோம். எங்க தெருல ஜாம்பவான் மாதிரி வயசான தாத்தா மாமாவும் இருப்பார் 2 ஆம் கிளாஸ் படிக்கும் சிண்டுவும் இருக்கும். போகும் வழி முழுசும் சும்மா போகமாட்டோம். பெருமாள் கோவில் வாசல்,சன்னதி தெரு ஆரம்பம்,டாக்டராத்துக்கு பக்கத்துல எல்லாம் ‘சாமியேய்ய்ய்ய்ய்ய்! சரணமய்யப்பா!’னு சரணம் போட்டு ஆத்துல முன்னடிக்க அளில தூங்கிண்டு இருக்கும் சன்னதி தெரு மாமா மாமிகள் “வானரபட்டாளம் பாயாசம் வைக்கர்துக்கு கிளம்பிருத்துகள்!”னு அவா வாய்ல விழுந்துட்டுத்தான் போவோம்.

கோவிலுக்கு போனதுக்கு அப்புறம் பயபக்தியா சன்னதில நமஸ்காரம் எல்லாம் பண்ணிட்டு பவ்யமா நின்னாக்க எங்க தெரு தர்மகர்த்தா தலைமைல ஒரு டீம் மீட்டிங் நடக்கும். அவர் வானரத்தோட வயது & தேஹபராக்ரமத்தை பொறுத்து வேலையை பிரிச்சு குடுப்பார். ஒரு கோஷ்டி வாய்க்கால்லேந்து வாளி வாளியா ஜலம் எடுத்துண்டு வரும்,இன்னொரு கோஷ்டி 300 தேங்காயை குடுமி பிச்சு குடுக்கும்,ஒரு அணி அதை கண்ணுல கீறாம லாவமகா உடைச்சு குடுக்கும் ( நம்ப டிபார்ட்மண்ட்), இன்னொரு டீம் அதை அழகா துருவும் (வயசான சில மாமாக்கள் “கைல பட்டுக்காம துருவுங்கோடா கோந்தேளா!”னு வாஞ்சையோட வார்னிங் குடுத்துண்டே இருப்பா), துருவின தேங்காய் பூவை கோடித்துண்டுல போட்டு தீர்த்தம் சேர்த்து சேர்த்து 15 வாளி பால் எடுக்கனும். எல்லாம் ரெடி பண்ணி வெச்சுண்டு அடுப்புக்கு பூஜை எல்லாம் பண்ணி ‘நளமகாராஜா’ நானா மாமா அடுப்பை மூட்டி உருளில அரிசி கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நல்ல ஆஜானுபாஹுவா இருக்கும் 4 பேர் 8 அடி நீளம் உள்ள ரெண்டு துடுப்பை வெச்சுண்டு எதிரெதிரா கிண்ட ஆரம்பிப்பா. (ரொட்டிசால்னா சேகர் அதுல கெட்டிக்காரன்)

கோவில் வெளிபிரகாரத்துலதான் தட்டி பந்தல் போட்டு பூஜை நடக்கும். இந்த பூஜைல மட்டும் பாத்தேள்னா எல்லா மாமா/மாமிமார்களும் எதோ சுதந்திரதின அணிவகுப்பு மாதிரி அழகா வரிசை வரிசையா உக்காச்சுண்டு இருப்பா. பூஜை முடிஞ்சு தீபாராதனை ஆன உடனே 'டபக்'னு Aboutturn போட்டு பந்திக்கு உக்காரனுமே அதுக்குத்தான் இந்த ஒழுங்கு..:). எதோ பிரச்சனைக்காக சண்டை போட்ட கோமா மாமிக்கு பக்கத்துல இடம் கிடைச்சாலும் "கோவில்னா எல்லாரும் வந்துபோகத்தான்டி செய்வா! அவாத்து திண்ணைல போயா என்னோட ப்ரு@#%தை வச்சு உக்காரப்போறேன்"னு தனக்குத் தானே சால்ஜாப்பு சொல்லிண்டே உக்காசுண்டு சாப்பிடும் சினிமா மாமியின் காமெடியை பாக்கர்து கண் கொள்ளா காட்சியா இருக்கும்.

முடுக்கு 'மூச்சா' மாமா இதுக்கு மேல ஒரு படி போய் என்ன சொல்லுவார் தெரியுமோ??

(கல்லிடை மாமா மாமிகள் கலாட்டா தொடரும்)................:)

Thursday, April 14, 2011

இரண்டாவது சுதந்திர போராட்டம்.

எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் இந்தியாவோட வளங்களையும்,மக்களையும் அட்டைபூச்சி மாதிரி உரிஞ்சுண்டு இருந்தான். பொறுக்கமுடியாம நம்ப மக்கள் திலகர் வழில ஒரு பிரிவாவும்,காந்தி வழில ஒரு பிரிவாவும் தொடர்ந்து போராடி கடைசில வெள்ளக்காரன் கிட்ட இருந்து சுதந்திரமும் கிடைச்சுது. அந்த போராட்டத்தை சுதந்திரப் போராட்டம்னு சொல்லுவோம். 63 வருஷம் கழிச்சி இப்போ இரண்டாவது சுதந்திர போராட்டம் தொடங்கியாச்சு. நமக்கு உள்ளயே இருக்கும் சில அட்டைபூச்சிகளுக்கு எதிரான போராட்டம் இது.



1947

ஒரு பக்கம் நாடு அபரிமிதமான வளர்ச்சியை எட்டிண்டு இருக்கு, இன்னொரு பக்கம் சோத்துக்கு வழி இல்லாம செத்துப்போறவாளோட எண்ணிக்கையும் ஜாஸ்தி ஆகிண்டே இருக்கு. நமக்கெல்லாம் ஆச்சர்யமா இருக்கலாம், ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. சமூக-பொருளாதார வல்லுனர்களால பல காரணங்கள் எடுத்து சொல்லப்பட்டாலும், பிரதானமான காரணம் லஞ்சம் & பொதுப் பணத்தில் ஊழல் இது இரண்டும் தான் முக்கிய காரணங்கள். அபரிமிதமான மக்கள்தொகையும் பெரும் சவாலா இருக்கு. “வாழும் வீட்டுக்கு ஒரு பெண்குட்டியும்,வைக்கோல்போருக்கு ஒரு கன்னுகுட்டியும் மதி!”னு ஒரு மலையாள வசனம் உண்டு. அதுமாதிரி ஊழலோட தீ கொஞ்சம் கொஞ்சமா பரவி தேசம் முழுசும் பத்திண்டு எரியர்து.

நாட்டோட செலவ செழிப்பை எல்லாம் ஒரு சில விஷக்கிருமிகள் கபளீகரம் பண்ணிக்கர்துனால நாடு அடைய வேண்டிய வளர்ச்சி வலுக்கட்டாயமா தடுக்கப்படர்து. மக்களோட அறியாமை தான் இதுக்கு எல்லாம் காரணம். அற்பமான விஷயங்கள்ல எல்லாம் நம்ப மனசு மயங்கி போய் இருக்கு. உடன்பிறப்பே! உளுத்தம்பருப்பே!னு சொல்லியாச்சுன்னா உடனே இங்க உள்ளவாளுக்கு வாயும் வயிரும் நிறையர்து. மண்ணாங்கட்டியாட்டமா மக்கள் இருக்கர்துனால தப்பு பண்ணரவாளுக்கும் செளகர்யமா இருக்கு.

நேத்திக்கு காத்தால வந்த லேட்டஸ்ட் மாடல் நோக்கியா போன் வாங்கி உபயோகிக்கனும்னு நமக்கு தெரியர்து, ஆனா 63 வருஷத்துக்கு முன்னாடி முழுக்க முழுக்க வெள்ளக்காரன் சட்டத்தை அப்பிடியே பாத்து ஈஅடிச்சான்காப்பியாட்டமா அடிச்சி நாம எழுதி வச்ச சட்டதிட்டங்கள் எதுலையும் மாற்றம் கொண்டுவரனும்னு யாருக்கும் தோணவே மாட்டேங்கர்து. ‘லூசுமாதிரி பேசாதே தக்குடு! சட்டத்துல திருத்தம் எல்லாம் ஆட்சில உள்ளவானா கொண்டு வரணும்!’னு சொல்லுவேள். நன்னா செளக்கியமா திடுகுதத்தம் பண்ணின்டு இருக்கும் கசவாளிகள் என்னிக்காவது திருத்தம் கொண்டு வந்து அவா தலைல அவாளே மண்ணை அள்ளி போட்டுப்பாளா? கிரைண்டர் தரேன்! மிக்ஸி தரேன்!னு செக்ஸியா அறிக்கை விடும் அட்டைபூச்சிகளை பாத்து பல்லை இளிக்கும் புள்ளைபூச்சிகளாதான் நாம இருக்கோம். இதை எல்லாம் தந்துட்டு சூப்பரா நம்ப தலைல மொளகாயை அரைச்சுட்டு போறா எல்லாரும்.இயந்திர அரைப்பானோ இல்லைனா கலப்பானோ எதுவா இருந்தாலும் ஆற்காட்டார் பீஸ்கட்டையை நிரந்தரமா பிடிங்கி வச்சுருந்தா ஒன்னும் பண்ணமுடியாதுடே!



உண்மையான சிங்கம்!

ஜனனாயகம் எல்லாம் ஒன்னும் இங்க கிடையாது பழையபடி மன்னராட்சி முறைதான் நடந்துண்டு இருக்கு. மத்தில இத்தாலி மகாராணியோட ஆட்சி, மாநிலத்துல ராஜராஜசோழன் ஆட்சி(மறுபடியும் மன்னார்குடி ஆட்சி வரும்னு சொல்லுண்டு இருக்கா எல்லாரும்). கடைசி வரைக்கும் மக்களாட்சி மட்டும் வரவே மாட்டேங்கர்து. இது எல்லாத்துக்கும் சங்கு ஊதற மாதிரி அன்னா ஹசாரேனு ஒரு புண்ணியவான் சில காரியங்கள் பண்ணின்டு வரர்து கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. அவர் சொல்லறபடி லோக்பால் மசோதா நிறைவேத்தியாச்சுன்னா ஊழல் பண்ணும் ஊதாரிகளுக்கு அடிக்கப்படும் முதல் சாவுமணி.

நம்ப எல்லாருக்குமே பல வருஷமாவே யாருக்காவது ஒருத்தருக்கு வாழ்க! சொல்லி சொல்லி பழக்கம் ஆயிடுத்து, எப்போதும் போடர வாழ்க!வை கொஞ்ச காலத்துக்கு அன்னா ஹசாரேவுக்கு நாம எல்லாம் போட்டாக்க புண்ணியமா போகும்.
ஒரு ஜெயம் கிடைச்சாச்சுன்னா அதை வெச்சுண்டு அடுத்தடுத்து பல போராட்டம் பண்ணுவேன்!னு உற்சாகமா சொல்லியிருக்கார் அந்த நல்லவர், அவரை நம்ப அரசியல்வியாதிகள் கிட்டேர்ந்து தள்ளிவெச்சு பத்திரமா பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை. அந்த நல்ல மனிதருக்கு நோயற்ற வாழ்வையும்,ஆரோக்யமான உடலையும் அளிக்க உம்மாச்சியை பிரார்த்திக்கிறேன். எரியர்தை பிடுங்கினா கொதிக்கர்து தானா அடங்கும்ங்கர கதையா நமக்கு போராட்டகுணமே இருக்கமாட்டேங்கர்து. IPL பாக்கலைனா அகிலமே அஸ்தமிச்சு போயிடும்னு ஆர்பரிக்கும் இளைய சமுதாயத்தையும், சினிமாகாராளை பாத்த உடனே வேலையை விட்டுட்டு இடுப்புல கையை வச்சுண்டு வேடிக்கை பாக்கும் சமூகத்தையும் வெச்சுண்டு போராட்டம் பண்ணர்து அப்படிங்கர்து ஓட்டை வாளி, அறுந்த கயிறை வெச்சுண்டு கிணத்துல ஜலம் எடுக்க போன கதைதான்.



2011

ஹசாரே ஒன்னும் அவருக்கு பென்ஷன் கிடைக்கலைன்னு போராட்டம் பண்ணலை, நாம எல்லாம் எதிர்காலத்துல டென்ஷன் இல்லாம இருக்கனும்னு ப்ராணனை விட்டுண்டு இருக்கார். உலககோப்பை இறுதிப்போட்டில அலைமோதின கூட்டத்தை மாதிரி 10 மடங்கு கூட்டம் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவா இறங்கி போராட்டம் பண்ணினாதான் நாம எல்லாரும் ஜீவிச்சு இருக்கமுடியும். விளையாட்டு,ஆடல்,பாடல் இதை மாதிரி எந்த விஷயமும் நம்மோட போராட்ட குணத்தை மழுங்கடிச்சுர கூடாது,சேதுபந்தனத்துல அணில் கூட தன்னால முடிஞ்ச அளவுக்கு உபகாரம் பண்ணின மாதிரி நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து இந்த விஷயத்துக்கு போராடியே தீரவேண்டிய கட்டாய நிலைமைல இருக்கோம். இதை விட்டுட்டு "கிரிக்கெட் ஒரு மதம் அதில் @#&ன் கடவுள்"னு வெட்டி வசனம் பேசிண்டு இருந்தாக்க, உருவிண்டு போகும் நம்ம வேட்டியை கூட நம்மாள காப்பாத்திக்க முடியாது.

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்!

Thursday, April 7, 2011

பதிவுலகில் தக்குடு

ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி நம்ப வல்லி அம்மா 'ஒரு தொடர்பதிவு எழுதுடா கோந்தை!'னு பாசத்தோட அழைச்சுருந்தாங்க, வழக்கம் போல தக்குடுவோட உலகமஹா சோம்பேரித்தனத்தால எழுதவே முடியலை. அதனால அதை இப்ப எழுதலாம்னு இருக்கேன்.



என் மனசோட ரூபம்....:)

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
தக்குடு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆரம்பத்துல இது என்னோட பெயரா இல்லாம இருந்தது, இப்போ இதுவே என்னோட பேர் ஆயிடுத்து, இந்த பேரை வைக்கர்த்துக்கு ப்ரத்யேகமான காரணம் எல்லாம் ஒன்னும் கிடையாது, எங்க அண்ணாவோட புள்ளையாண்டானை நான் அப்பிடிதான் கூப்பிடுவேன். அவனும் 3 மாச குழந்தையா இருக்கும் போதே தக்குடு!னு கூப்டாச்சுன்னா 'யே!'னு ஒரு சத்தம் குடுத்துட்டு அழகா சிரிப்பான். "எண்ணச்சிதறல்! படிக்கறவாளோட கதறல்!"னு எல்லாம் பேர் வைச்சுண்டு அடுத்தவா ப்ராணனை வாங்க வேண்டாம்னு தான் இந்த பேர். இந்த பேரை முடிவு பண்ணர்த்துக்குள்ள நான் பட்டபாடு நாய் கூட படாது. புலிகுட்டி பாண்டியன்,எலிகுஞ்சு டாக்டர் & சிலபல பேர் எல்லாம் லிஸ்ட்ல வெச்சுருந்தேன், நம்ப மனுஷா முழூபேரை சொல்லி கூப்பிடவே மாட்டா, புலிகுட்டி பேரை எப்பிடி பிரிச்சாலும் பிரச்சனை எதுவும் வராது ஆனா இரண்டாவது பேரை பிரிக்க ஆரம்பிச்சா நிலைமை கவலைக்கிடமாயிடும். அதனால தக்குடுபாண்டினு பேர் வெச்சு இப்போ அது தக்குடு ஆயிடுத்து.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

என்னவோ அபூர்வராகங்கள் படத்துல காலடி எடுத்து வச்ச ரஜினி கிட்ட கேக்கர மாதிரி கேக்கரேளே? நிச்சயமா நான் எழுதர்து எல்லாம் எந்த பத்திரிக்கைலையும் போடமாட்டானு நன்னா தெரியும் (ஆனந்த விகடன்ல வரும் அளவுக்கு நாம என்ன இட்லி மாமி மாதிரி பெரிய எழுத்தாளரா), அந்த சமயத்துல தான் கூகிளாண்டவர் ஓசில தரார்னு கேள்விப் பட்டு எழுத ஆரம்பிச்சேன். நாமதான் ஓசில ஓசி குடுக்கர்தா சொன்னா ஓட்டையே போட்டுருவோமே இல்லையா! பெரிய்ய்ய்ய்ய இலக்கியத்தரம் எல்லாம் இதுல இருக்காது, ஆனா பக்கத்தாத்து திண்ணைல உக்காச்சுண்டு வம்பளந்த ஒரு அல்ப சந்தோஷமாவது படிக்கரவாளுக்கு கிடைக்காதா?னு ஒரு நம்பிக்கைல ஓடிண்டு இருக்கு.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னுமே பண்ணலை!னு தான் சொல்லனும். எவ்வளவோ பண்ணி இருக்கலாம். க்ஷண பொழுதுல குழாயடி சண்டை போடும் எதாவது ஒரு குழுமத்துல சேர்ந்து இருக்கலாம்,தெரிஞ்சவா தெரியாதவானு இல்லாம சகட்டு மேனிக்கு எல்லா ப்ளாக்குக்கும் போய் "அருமையாக சொன்னீர்கள்! எருமையாக நின்றீர்கள்!"னு ஒரு பிட்டை போட்டு இருக்கலாம், எல்லா ப்ளாக்கையும் பாலோ பண்ணி அவாளையும் வலுக்கட்டாயமா என்னோட ப்ளாக்கை பாலோ பண்ண வச்சு இருக்கலாம், ஆனா இது எதுவுமே தெரியாத அசடா போயிட்டேன். தெரிஞ்சவாளுக்கு மட்டும் மெயில் அனுப்பி வெச்சுண்டு இருக்கேன். அவ்ளோதான் நம்ப பிரயத்தனம்...:) பரஸ்பர முதுகு சொரிதல் & பதில் மரியாதை முயற்சிகளில் நமக்கு இஷ்டம் இல்லை.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

கேள்வியே தப்பு, சொந்த விஷயங்கள் தான் முழுமூச்சா ஓடிண்டு இருக்கு. கதை எல்லாம் எழுத மேல்மாடில நெறைய சரக்கு இருக்கனும் . நடுல நடுல மானே! தேனே! போட்டு கவிதை எழுதர்த்துக்கு என்ன தக்குடு?னு தானே கேக்கரேள்? மானே தேனேக்கு நடுல போடர்த்துக்கு எதாவது வேணுமே அதுக்கு எங்க போகர்து??( நாம என்ன சிவகுமரனா கவிதை எல்லாம் பொலந்துகட்டர்துக்கு)..:)

விஷேஷமான காரணம் எல்லம் கிடையாது, பின்னாடி வரப் போற எதிர்கால சந்ததிகளுக்கு திரட்டிபாலும்,குண்டலமும் போய்சேரனுமோ இல்லையோ! அதுக்குதான் எழுதர்து.

நிறைய பேருக்கு திரட்டிபால்,குண்டலம்,சிலுக்கு பத்தி கேட்கும்/பார்க்கும் போது தக்குடு ஞாபகம் வந்து ஒரு குட்டி சிரிப்பு அவா முகத்துல வருது இல்லையா! அதுதான் விளைவு...:)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கா எழுத ஆரம்பிச்சு இப்போ நிறைய சம்பாத்யமும் பண்ணியாச்சு. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத தங்கமான மனுஷாளோட இதயங்கள்ல தக்குடுவுக்கு கிடைச்ச குட்டியூண்டு இடம் தான் நான் சொன்ன சம்பாத்யம். ஒரு விஷயம் தெரியுமோ உங்களுக்கு? இந்த ஓசிபேப்பர் படிக்கரவாள்ல நிறையா பேர் இந்தியாவுக்கு தக்குடு வரும் போது ஆசையா அவாத்துக்கு கூப்பிட்டு வயிறு நிறையா சாப்பாடு போடறா! சென்னை கலாக்ஷேத்ரா பக்கத்துல இருக்கும் ஒரு ஆத்துல சாப்பிட்டு முடிச்சுட்டு என்னால நடக்கவே முடியலைனா பாத்துக்கோங்கோ!அமெரிக்கா,சிங்கப்பூர்,லண்டன்,கனடா எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும் அண்ணாமார்கள்,அக்காமார்கள்களோட அன்பான இதயங்கள் தான் தக்குடு பண்ணின சம்பாத்யம்...:)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நமக்கு 2 வலைபதிவு இருக்கு மாசத்துல 3 வெள்ளிக்கிழமை தக்குடு ப்ளாக்லையும் ஒரு பதிவு உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்லையும் எழுதிண்டு இருக்கேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஏன் இல்லாம நிறையா உண்டு, சிலபேரோட எழுத்தை எல்லாம் படிக்கும் போது "இவாளால மட்டும் எப்பிடி இவ்ளோ அழகா எழுத முடியர்து?"னு பொறாமை பட்ட சமயங்கள் நிறையா உண்டு. ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்லாம விட்டாக்க அது கஷ்டமா போகும். இங்க வந்துட்டு யாரும் வருத்தத்தோட போககூடாது, வேணும்னா என்னோட கமண்ட் செக்ஷனை கூர்ந்து கவனிச்சு போய் அவாளை படிச்சு பாருங்கோ தெரியும்!..:)(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! ஒரு வழியா சமாளிச்சாச்சு)

யார் மேலையும் கோவம் எல்லாம் எனக்கு கிடையாது. நமக்கு தோதா உள்ளவா கூட சேர்ந்துக்க வேண்டியதுதான், சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிவை எல்லாம் படிச்சுட்டு கோவப்படர்துல பிரயோஜனம் இல்லை.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி!

முதல் பதிவுக்கே 26 கமண்ட் போட்டு திக்குமுக்காட பண்ணின அன்பான மக்கள் இருக்கர்துனால தனிப்பட்ட முறைல யாரையும் சொல்லமுடியாது. திவா அண்ணா முதல் கமண்ட் போட்டார்னு வேணும்னா சொல்லலாம்...;)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்!

ஹலோ சொல்லவேண்டியதை எல்லாத்தையும் இங்க சொல்லிட்டா அப்புறம் போஸ்ட் எப்பிடி போடர்து...:)(இனிமே சொல்லர்த்துக்கு என்ன பாக்கி இருக்கு?னு எல்லாரும் சொல்லுவேள்னு தக்குடு அறிவான்)

2010லையே இந்த தொடர் பதிவை எல்லாரும் எழுதியாச்சு, அதனால யாரை அடுத்து எழுத அழைக்கர்துன்னே தெரியலை. எழுதாதவா யாராவது இருந்தேள்னா தக்குடு எழுத சொன்னான்!னு போட்டு(மறக்காம நம்ப கடைக்கு ஒரு லிங்க்கையும் குடுங்கடே!) எழுதிடுங்கோ!

குறிப்பு - 50 ரன் அடிச்சதுக்கு அப்புறம் பேட்டை தூக்க மறந்து போனவா 54 போஸ்ட் வந்ததுக்கு அப்புறம் காமிக்க எதாவது ரூல் இருக்கா? மன்னார்குடியின் மஹேந்தர்சிங் தோனி!! கொஞ்சம் ஜாரிச்சு சொல்லுங்கோளேன்...:)